Tag: புறம்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

    புறநானூறு

    வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
    தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங் கடற்கு
    ஆழி அனையன் மாதோ என்றும்
    பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
    புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
    தொன்மை சுட்டிய வண்மை யோனே

    மதுரை கணக்காயனார்

  • பூவற் படுவிற் கூவல் தோண்டிய

    புறநானூறு

    பூவற் படுவிற் கூவல் தோண்டிய
    செங்கண் சின்னீர் பெய்த சீறில்
    முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
    யாம் க·டு உண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
    புறவும் இதலும் அறவும் உண்கெனப்
    பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
    முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
    ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
    புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
    சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

    ஆலங்குடி வங்கனார்

  • இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்

    புறநானூறு

    இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
    இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே
    நல்லரா உறையும் புற்றம் போலவும்
    கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
    மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
    உளன் என வெரூஉம் ஓர்ஒளி
    வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே

    மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

  • கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க

    புறநானூறு

    கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
    மயில்அம் சாயல் மாஅ யோளடு
    பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
    மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
    குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
    புன்புறப் பெடையடு வதியும்
    யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

    பெருங்குன்றூர் கிழார்

  • அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்

    புறநானூறு

    அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
    கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சிக்
    காணிய சென்ற இரவன் மாக்கள்
    களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவ
    உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
    கழிமுரி குன்றத்து அற்றே
    எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே

    மாங்குடி மருதனார்

  • மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

    புறநானூறு

    மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்
    கேட்பின் அல்லது காண்பறி யலையே
    காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
    விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்
    கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
    மாரி யன்ன வண்மைத்
    தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

    புறநானூறு

    போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
    உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
    ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
    வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
    நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
    சுரை தழீஇய இருங் காழொடு
    மடை கலங்கி நிலைதிரிந் தனவே
    களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
    குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
    பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
    மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
    பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
    களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
    அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
    பொலந் தும்பைக் கழல் பாண்டில்
    கணை பொருத துளைத்தோ லன்னே
    ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
    பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
    நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
    இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
    ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
    சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
    கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
    குறுந்தொடி மகளிர் தோள்விடல்
    இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

    ஔவையார்

  • ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ

    புறநானூறு

    ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
    ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
    பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
    கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
    பிறைநுதல் விளங்கு மொருகண் போல
    வேந்துமேம் பட்ட பூந்தார் மாற
    கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
    நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
    நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
    அறநெறி முதற்றே யரசின் கொற்றம்
    அதனால், நமரெனக் கோல்கோடாது
    பிறரெனக் குணங்கொல்லாது
    ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
    திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
    வானத் தன்ன வண்மையு மூன்றும்
    உடையை யாகி யில்லோர் கையற
    நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
    வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
    நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
    டுவளி தொகுப்ப வீண்டிய
    வடுவா ழெக்கர் மணலினும் பலவே

    மருதனிளநாகனார்

  • இன்று செலினுந் தருமே சிறுவரை

    புறநானூறு

    இன்று செலினுந் தருமே சிறுவரை
    நின்று செலினுந் தருமே பின்னும்
    முன்னே தந்தனென் என்னாது துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
    தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப
    அருந்தொழில் முடியரோ திருந்துவேல் கொற்றன்
    இனமலி கதச்சேக் களனொடு வேண்டினும்
    களமலி நெல்லின் குப்பை வேண்டினும்
    அருங்கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை
    பிறர்க்கும் அன்ன அறத்தகை யன்னே
    அன்னன் ஆகலின் எந்தை உள்ளடி
    முள்ளும் நோவ உற்றாக தில்ல
    ஈவோர் அரியஇவ் உலகத்து
    வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்