Tag: புறம்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்

  • வென்வேல் நது

    புறநானூறு

    வென்வேல் ___________________ நது
    முன்றில் கிடந்த பெருங்களி யாளற்கு
    அதளுண் டாயினும் பாய்உண்டு ஆயினும்
    யாதுண்டு ஆயினும் கொடுமின் வல்லே
    வேட்கை மீளப_______________
    ____________கும் எமக்கும் பிறர்க்கும்
    யார்க்கும் ஈய்ந்து துயில்ஏற் பினனே

    மவேம்பற்றூர்க் குமரனார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்

    புறநானூறு

    கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக்
    காட்டொடு மிடைந்த சீயா முன்றில்
    நாட்செருக்கு அனந்தர்த் துஞ்சு வோனே
    அவன் எம் இறைவன் யாம்அவன் பாணர்
    நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
    இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக்
    கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் இதுகொண்டு
    ஈவது இலாளன் என்னாது நீயும்
    வள்ளி மருங்குல் வயங்குஇழை அணியக்
    கள்ளுடைக் கலத்தேம் யாம்மகிழ் தூங்கச்
    சென்று வாய் சிவந்துமேல் வருக
    சிறுகண் யானை வேந்து விழுமுறவே

    மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்

    புறநானூறு

    உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
    கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
    மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி
    இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
    தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றதன்
    கான்றுபடு கனைஎரி போலத்
    தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்

    ஔவையார்

  • எமக்கே கலங்கல் தருமே தானே

    புறநானூறு

    எமக்கே கலங்கல் தருமே தானே
    தேறல் உண்ணும் மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே இனியே
    நேரார் ஆரெயில் முற்றி
    வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே

  • மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்

    புறநானூறு

    மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
    முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
    நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
    புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
    குடியும் மன்னுந் தானே கொடியெடுத்து
    நிறையழிந்து எழுதரு தானைக்குச்
    சிறையும் தானே தன் இறைவிழு முறினே

    ஐயூர் முடவனார்

  • பெருநீர் மேவல் தண்ணடை எருமை

    புறநானூறு

    பெருநீர் மேவல் தண்ணடை எருமை
    இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
    பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
    கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
    நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
    துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
    தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

  • முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்

    புறநானூறு

    முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
    பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
    கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
    பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
    தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
    இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
    கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
    பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
    இவ்வழங் காமையின் கல்லென ஒலித்து
    மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
    கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
    ஆர நெருப்பின் ஆரல் நாறத்
    தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
    இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
    தங்கினை சென்மோ பாண தங்காது
    வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    வீரை வெளியனார்