Tag: புறம்

  • வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

    புறநானூறு

    வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
    நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
    எல்லா மனையும் கல்லென் றவ்வே
    வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
    நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே

    வெள்ளை மாளர்

  • என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

    புறநானூறு

    என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
    நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
    நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா
    துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
    அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்
    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
    துடிய பாண பாடுவல் விறலி
    என்ஆ குவிர்கொல் அளியிர் நுமக்கும்
    இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
    தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
    கழிகல மகளிர் போல
    வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்

    புறநானூறு

    கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
    வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்
    தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
    வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
    இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
    சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி
    வாடுமுலை ஊறிச் சுரந்தன
    ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே

    ஔவையார்

  • கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே

    புறநானூறு

    கெடுக சிந்தை கடிதுஇவள் துணிவே
    மூதின் மகளிர் ஆதல் தகுமே
    மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை
    யானை எறிந்து களத்துஒழிந் தன்னே
    நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
    பெருநிரை விலக்கி ஆண்டுப்பட் டனனே
    இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
    வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
    பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
    ஒருமகன் அல்லது இல்லோள்
    செருமுக நோக்கிச் செல்க என விடுமே

    ஒக்கூர் மாசாத்தியார்

  • வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்

    புறநானூறு

    வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
    கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
    குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
    தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு எனப்
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவுஉமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

    பெருந்தலைச் சாத்தனார்

  • நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்

    புறநானூறு

    நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
    முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
    படைஅழிந்து மாறினன் என்று பலர் கூற
    மண்டுஅமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
    முலைஅறுத் திடுவென் யான் எனச் சினைஇக்
    கொண்ட வாளடு படுபிணம் பெயராச்
    செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
    படுமகன் கிடக்கை காணூஉ
    ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே

    காக்கைபாடினியார்

  • பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்

    புறநானூறு

    பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
    செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு
    உயவொடு வருந்தும் மன்னே இனியே
    புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்
    முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே
    உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
    மான்உளை அன்ன குடுமித்
    தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே

    பொன்முடியார்

  • பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்

    புறநானூறு

    பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
    மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
    நன்மை நிறைந்த நயவரு பாண
    சீறூர் மன்னன் சிறியிலை எ·கம்
    வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே
    வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
    சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே
    உளங்கழி சுடர்ப்படை ஏந்தி நம் பெருவிறல்
    ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
    புன்தலை மடப்பிடி நாணக்
    குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே

    கோவூர் கிழார்

  • ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

    புறநானூறு

    ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
    குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
    வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
    வேனல் வரி அணில் வாலத்து அன்ன
    கான ஊகின் கழன்றுகு முதுவீ
    அரியல் வான்குழல் சுரியல் தங்க
    நீரும் புல்லும் ஈயாது உமணர்
    யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
    பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
    வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
    எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்
    பண் கொளற்கு அருமை நோக்கி
    நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே

  • களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி

    புறநானூறு

    களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி
    அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
    ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
    நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
    விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்
    ஒ_________________________ வேந்தனொடு
    நாடுதரு விழுப்பகை எய்துக எனவே

    அள்ளூர் நன் முல்லையார்