Tag: புறம்

  • ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

    புறநானூறு

    ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
    இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
    வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
    செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
    முதுகுமெய்ப் புலைத்தி போலத்
    தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
    புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

    பெரும்பூதனார்

  • நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்

    புறநானூறு

    நல்லுரை துறந்த நறைவெண் கூந்தல்
    இருங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
    செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
    மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
    குடப்பால் சில்லுறை போலப்
    படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே

    மாதுரைப் பூதன் இளநாகனார்

  • முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்

    புறநானூறு

    முட்கால் காரை முதுபழன் ஏய்ப்பத்
    தெறிப்ப விளைந்த தீங்கந் தாரம்
    நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு
    பச்சூன் தின்று பைந்நிணப் பெருத்த
    எச்சில் ஈர்ங்கை விற்புறம் திமிரிப்
    புலம்புக் கனனே புல்அணற் காளை
    ஒருமுறை உண்ணா அளவைப் பெருநிரை
    ஊர்ப்புறம் நிறையத் தருகுவன் யார்க்கும்
    தொடுதல் ஓம்புமதி முதுகட் சாடி
    ஆதரக் கழுமிய துகளன்
    காய்தலும் உண்டு அக் கள்வெய் யோனே

    உலோச்சனார்

  • கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்

    புறநானூறு

    கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
    வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
    ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய
    திணிநிலை அலறக் கூவை போழ்ந்து தன்
    வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
    ஓம்புமின் ஓம்புமின் இவண் ஓம்பாது
    தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
    கன்றுஅமர் கறவை மான
    முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே

    ஒரூஉத்தனார்

  • செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்

    புறநானூறு

    செருப்புஇடைச் சிறுபரல் அன்னன் கணைக்கால்
    அவ்வயிற்று அகன்ற மார்பின் பைங்கண்
    குச்சின் நிரைத்த குரூஉமயிர் மோவாய்ச்
    செவிஇறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு
    யார்கொலோ அளியன் தானே தேரின்
    ஊர்பெரிது இகந்தன்றும் இலனே அரண்எனக்
    காடுகைக் கொண்டன்றும் இலனே காலைப்
    புல்லார் இனநிரை செல்புறம் நோக்கிக்
    கையின் சுட்டிப் பைஎன எண்ணிச்
    சிலையின் மாற்றி யோனே அவைதாம்
    மிகப்பல ஆயினும் என்னாம்-எனைத்தும்
    வெண்கோள் தோன்றாக் குழிசியடு
    நாள்உறை மத்தொலி கேளா தோனே

  • நீலக் கச்சைப் பூவார் ஆடைப்

    புறநானூறு

    நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
    பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
    மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
    தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
    எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
    கையின் வாங்கித் தழீஇ
    மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே

    உலோச்சனார்

  • கலம்செய் கோவே கலம்செய் கோவே

    புறநானூறு

    கலம்செய் கோவே கலம்செய் கோவே
    அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
    சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
    சுரம்பல வந்த எமக்கும் அருளி
    வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
    அகலிது ஆக வனைமோ
    நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே

  • மாவா ராதே மாவா ராதே

    புறநானூறு

    மாவா ராதே மாவா ராதே
    எல்லார் மாவும் வந்தன எம்இல்
    புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
    செல்வன் ஊரும் மாவா ராதே
    இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
    விலங்கிடு பெருமரம் போல
    உலந்தன்று கொல் அவன் மலைந்த மாவே

    எருமை வெளியனார்

  • ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

    புறநானூறு

    ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே
    அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்
    என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
    இன்னாது உற்ற அறனில் கூற்றே
    திரைவளை முன்கை பற்றி
    வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

    வன்பரணர்

  • மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

    புறநானூறு

    மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி
    போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
    காதல் நன்மரம் நீ நிழற் றிசினே
    கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
    தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
    காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
    ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
    பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே

    மோசிசாத்தனார்