Tag: புறம்

  • என்திறத்து அவலம் கொள்ளல் இனியே

    புறநானூறு

    என்திறத்து அவலம் கொள்ளல் இனியே
    வல்வார் கண்ணி இளையர் திளைப்ப
    நாகாஅல் என வந்த மாறே எழாநெல்
    பைங்கழை பொதிகளைந்து அன்ன விளர்ப்பின்
    வளைஇல் வறுங்கை ஓச்சிக்
    கிளையுள்ஒய்வலோ கூறுநின் உரையே

    குளம்பாதாயனார்

  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

    புறநானூறு

    கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
    சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
    மலை கெழு நாட மா வண் பாரி
    கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
    புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
    பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
    ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி
    இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
    மேயினேன் அன்மை யானே ஆயினும்
    இம்மை போலக் காட்டி உம்மை
    இடையில் காட்சி நின்னோடு
    உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

    கபிலர்

  • கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து

    புறநானூறு

    கறங்குவெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து
    தில்லை அன்ன புல்லென் சடையோடு
    அள்இலைத் தாளி கொய்யு மோனே
    இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
    சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே

    மாற்பித்தியார்

  • சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

    புறநானூறு

    சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
    பெரிய கட் பெறினே
    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
    சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
    என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
    அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
    நரந்தம் நாறும் தன் கையால்
    புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
    சென்றுவீழ்ந் தன்று அவன்
    அருநிறத்து இயங்கிய வேலே
    ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
    இனிப் பாடுநரும் இல்லை படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
    பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
    சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
    ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

    ஔவையார்

  • ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்

    புறநானூறு

    ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
    பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
    இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்
    கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
    கான யானை தந்த விறகின்
    கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
    புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே

    மாற்பித்தியார்

  • குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

    புறநானூறு

    குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
    இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
    கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
    கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கி
    அல்லி உணவின் மனைவியடு இனியே
    புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
    வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
    முனித்தலைப் புதல்வர் தந்தை
    தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

    தாயங் கண்ணியார்

  • கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்

    புறநானூறு

    கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்
    கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
    எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
    அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
    பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
    உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்
    அகல்நாட்டு அண்ணல் புகாவே நெருநைப்
    பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி
    ஒருவழிப் பட்டன்று மன்னே இன்றே
    அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
    உயர்நிலை உலகம் அவன்புக வரி
    நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
    அழுதல் ஆனாக் கண்ணள்
    மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே

    தும்பிசேர் கீரனார்

  • அளிய தாமே சிறுவெள் ளாம்பல்

    புறநானூறு

    அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
    இளையம் ஆகத் தழையா யினவே இனியே
    பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுது மறுத்து
    இன்னா வைகல் உண்ணும்
    அல்லிப் படுஉம் புல் ஆயினவே

    ஒக்கூர் மாசாத்தனார்

  • யானை தந்த முளிமர விறகின்

    புறநானூறு

    யானை தந்த முளிமர விறகின்
    கானவர் பொத்திய ஞெலிதீ விளக்கத்து
    மடமான் பெருநிரை வைகுதுயில் எடுப்பி
    மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்
    நீர்வார் கூந்தல் இரும்புறம் தாழப்
    பேரஞர்க் கண்ணள் பெருங்காடு நோக்கித்
    தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
    முழுவுகண் துயிலாக் கடியுடை வியனகர்ச்
    சிறுநனி தமியள் ஆயினும்
    இன்னுயிர் நடுங்குந்தன் இளமைபுறங் கொடுத்தே

    மதுரைப் பேராலவாயர்

  • யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே

    புறநானூறு

    யங்குப் பெரிது ஆயினும் நோய்அளவு எனைத்தே
    உயிர்செகுக் கல்லா மதுகைத்து அன்மையின்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு ஈமத்து
    ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
    ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை
    இன்னும் வாழ்வல் என்இதன் பண்பே

    சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை