புறநானூறு
குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
நின்ற என்நயந்து அருளி ஈது கொண்டு
ஈங்கனம் செல்க தான் என என்னை
யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
தினை அனைத்து ஆயினும் இனிதுஅவர்
துணை அளவு அறிந்து நல்கினர் விடினே
பெருஞ்சித்திரனார்