Tag: புறம்

  • நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்

    புறநானூறு

    நீயே அமர்காணின் அமர்கடந்து அவர்
    படை விலக்கி எதிர் நிற்றலின்
    வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யடு
    கேள்விக்கு இனியை கட்கின் னாயே
    அவரே நிற்காணின் புறங் கொடுத்தலின்
    ஊறுஅறியா மெய் யாக்கை யடு
    கண்ணுக்கு இனியர் செவிக்குஇன் னாரே
    அதனால்நீயும் ஒன்று இனியைஅவரும் ஒன்றுஇனியர்
    ஒவ்வா யாவுள மற்றே வெல்போர்க்
    கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி
    நின்னை வியக்குமிவ் வுலகம் அஃது
    என்னோ பெரும உரைத்திசின் எமக்கே

    கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்

    புறநானூறு

    மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்
    மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்
    கடவுட் பேணிய குறவர் மாக்கள்
    பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
    புனைத்தினை அயிலும் நாட சினப் போர்க்
    கைவள் ஈகைக் கடுமான் பேக
    யார்கொல் அளியள் தானே நெருநல்
    சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
    குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
    நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
    வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
    நின்னும்நின் மலையும் பாட இன்னாது
    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
    முலையகம் நனைப்ப விம்மிக்
    குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே

    கபிலர்

  • மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்

    புறநானூறு

    மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
    பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
    எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
    வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
    இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
    வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
    புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
    மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
    குறுகல் ஓம்புமின் தெவ்விர் அவனே
    சிறுகண் யானை வெண்கோடு பயந்த
    ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
    நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
    பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
    நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
    இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
    விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
    உலைக்கல் அன்ன வல்லா ளன்னே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • நும்படை செல்லுங் காலை அவர்படை

    புறநானூறு

    நும்படை செல்லுங் காலை அவர்படை
    எறித்தெறி தானை முன்னரை எனாஅ
    அவர்படை வருஉங் காலை நும்படைக்
    கூழை தாங்கிய அகல் யாற்றுக்
    குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ
    அரிதால் பெரும நின் செவ்வி என்றும்
    பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை
    இன்னே விடுமதி பரிசில் வென்வேல்
    இளம்பல் கோசர் விளங்குபடை கன்மார்
    இகலினர் எறிந்த அகல்இலை முருக்கின்
    பெருமரக் கம்பம் போலப்
    பொருநர்க்கு உலையாநின் வலன் வாழியவே

    காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

    புறநானூறு

    நன் றாய்ந்த நீள் நிமிர்சடை
    முது முதல்வன் வாய் போகாது
    ஒன்று புரிந்த ஈரி ரண்டின்
    ஆறுணர்ந்த ஒரு முதுநூல்
    இகல் கண்டோர் மிகல் சாய்மார்
    மெய் அன்ன பொய் உணர்ந்து
    பொய் ஓராது மெய் கொளீஇ
    மூவேழ் துறைபும் முட்டின்று போகிய
    உரைசால் சிறப்பின் உரவோர் மருக
    வினைக்கு வேண்டி நீ பூண்ட
    புலப் புல்வாய்க் கலைப் பச்சை
    சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய
    மறம் கடிந்த அருங் கற்பின்
    அறம் புகழ்ந்த வலை சூடிச்
    சிறு நுதல் பேர் அகல் அல்குல்
    சில சொல்லின் பல கூந்தல் நின்
    நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்
    தமக்கு அமைந்த தொழில் கேட்பக்
    காடு என்றா நாடுஎன்று ஆங்கு
    ஈரேழின் இடம் முட்டாது
    நீர் நாண நெய் வழங்கியும்
    எண் நாணப் பல வேட்டும்
    மண் நாணப் புகழ் பரப்பியும்
    அருங் கடிப் பெருங் காலை
    விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை
    என்றும் காண்கதில் அம்ம யாமே குடாஅது
    பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்
    பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்
    தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்
    உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்
    செல்வல் அத்தை யானே செல்லாது
    மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்
    கழைவளர் இமயம்போல
    நிலீஇயர் அத்தை நீ நிலமிசை யானே

    ஆவூர் மூலங் கிழார்

  • மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

    புறநானூறு

    மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
    தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே
    துன்னரும் சிறப்பின் உயர்ந்த செல்வர்
    இன்மையின் இரப்போர்க்கு ஈஇ யாமையின்
    தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே
    தாள்தாழ் படுமணி இரட்டும் பூனுதல்
    ஆடியல் யானை பாடுநர்க்கு அருகாக்
    கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
    பாடி நின்றெனன் ஆகக் கொன்னே
    பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என்
    நாடுஇழந் ததனினும் நனிஇன் னாது என
    வாள்தந் தனனே தலை எனக்கு ஈயத்
    தன்னிற் சிறந்தது பிறிதுஒன்று இன்மையின்
    ஆடுமலி உவகையோடு வருவல்
    ஓடாப் பூட்கைநிற் கிழமையோன் கண்டே

    பெருந்தலைச் சாத்தனார்

  • ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்

    புறநானூறு

    ஆடுநனி மறந்த கோடுஉயர் அடுப்பின்
    ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப்
    பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
    இல்லி தூர்த்த பொல்லா வறுமுலை
    சுவைத்தொறும் அழூஉம்தன் மகத்துவம் நோக்கி
    நீரொடு நிறைந்த ஈர்இதழ் மழைக்கண்என்
    மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ
    நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண
    என்நிலை அறிந்தனை யாயின் இந்நிலைத்
    தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
    பண்ணமை நரம்பின் பச்சை நல்யாழ்
    மண்ணமை முழவின் வயிரியர்
    இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே

    பெருந்தலைச் சாத்தனார்

  • நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்

    புறநானூறு

    நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
    பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும்
    கடும்பின் கடும்பசி தீர யாழநின்
    நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும்
    இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது
    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே
    பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
    திருந்துவேல் குமணன் நல்கிய வளனே

    பெருஞ்சித்திரனார்

  • ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென

    புறநானூறு

    ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென
    ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
    மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
    விசிபிணி முரசமொடு மண்பல தந்த
    திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
    படை வேண்டுவழி வாள் உதவியும்
    வினை வேண்டுவழி அறிவு உதவியும்
    வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
    அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
    தோலா நல்லிசை நாலை கிழவன்
    பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
    திருந்துவேல் நாகற் கூறினர் பலரே

    வடநெடுந்தத்தனார்

  • கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து

    புறநானூறு

    கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து
    கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
    மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
    உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
    உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
    ஈண்டோர் இன்சா யலனே வேண்டார்
    எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
    கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
    நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
    அஞ்சி நீங்கும் காலை
    ஏம மாகத் தான்முந் துறுமே

    ஆவூர் மூலங்கிழார்