புறநானூறு
நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே
கபிலர்
புறநானூறு
நாட் கள் உண்டு நாள்மகிழ் மகிழின்
யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே
தொலையா நல்லிசை விளங்கு மலயன்
மகிழாது ஈத்த இழையணி நெடுந்தேர்
பயன்கிழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே
கபிலர்
புறநானூறு
சுவல் அழுந்தப் பல காய
சில் லோதிப் பல்இளை ஞருமே
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலிய ருமே
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன் மெய் கூறுவல்
ஓடாப் பூட்கை உரவோர் மருக
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந
மாயா உள்ளமொடு பரிசில் துன்னிக்
கனிபதம் பார்க்கும் காலை யன்றே
ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச்
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை
இருநிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒருநாள்
அருஞ் சமம் வருகுவ தாயின்
வருந்தலு முண்டு என் பைதலங் கடும்பே
மருதன் இளநாகனார்
புறநானூறு
கடல் கொளப் படாஅது உடலுநர் ஊக்கார்
கழல்புனை திருந்துஅடிக் காரி நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே
வீயாத் திருவின் விறல் கெழு தானை
மூவருள் ஒருவன் ‘துப்பா கியர்’ என
ஏத்தினர் தரூஉங் கூழே நும்குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலர் அதுவே
வடமீன் புரையுங் கற்பின் மடமொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலைநீ பெருமிதத் தையே
கபிலர்
புறநானூறு
ஆனினம் கலித்த அதர்பல கடந்து
மானினம் கலித்த மலையின் ஒழிய
மீளினம் கலித்த துறைபல நீந்தி
உள்ளி வந்த வள்ளுயிர்ச் சீறியாழ்
சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண
நீயே பேரெண் ணலையே நின்இறை
’மாறி வா’ என மொழியலன் மாதோ
ஒலியிருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
மரன் அணி பெருங்குரல் அனையன் ஆதலின்
நின்னை வருதல் அறிந்தனர் யாரே
மருதன் இளநாகனார்
புறநானூறு
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே
நீயே முன்யான் அரியு மோனே துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக் கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண் ணன்ன மலர்பூக் குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்
பொன் னன்ன வீ சுமந்து
மணி யன்ன நீர் கடற் படரும்
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே
ஒருசிறைப் பெரியனார்
புறநானூறு
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த பஃறுன்னத்து
இடைப் புரைபற்றிப் பிணி விடாஅ
ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த
பேஎன் பகையென ஒன்று என்கோ
உண்ணா மையின் ஊன் வாடித்
தெண் ணீரின் கண் மல்கிக்
கசிவுற்ற என் பல் கிளையடு
பசி அலைக்கும் பகைஒன் றென்கோ
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்
நின்னது தா என நிலை தளர
மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்
குரங் கன்ன புன்குறுங் கூளியர்
பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ
ஆஅங்கு எனைப் பகையும் அறியுநன் ஆய்
எனக் கருதிப் பெயர் ஏத்தி
வா யாரநின் இசை நம்பிச்
சுடர் சுட்ட சுரத்து ஏறி
இவண் வந்த பெரு நசையேம்
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
அனைத் துரைத்தனன் யான்ஆக
நினக்கு ஒத்தது நீ நாடி
நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
நுண்பல மணலினும் ஏத்தி
உண்குவம் பெரும நீ நல்கிய வளனே
துறையூர் ஓடை கிழார்
புறநானூறு
கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
அருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
வந்தெனன் எந்தை யானே யென்றும்
மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
கறையடி யானை இரியல் போக்கும்
மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்
களிறும் அன்றே மாவும் அன்றே
ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே
பாணர் படுநர்பரிசிலர் ஆங்கவர்
தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
அன்ன வாக நின் ஊழி நின்னைக்
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறுமுரண் கடந்த ஆற்றல்
பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
புறநானூறு
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்
பிறரும் சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
புறநானூறு
முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க என் செவியே
நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
குவளைப் பைஞ்சுனை பருகி அயல
தகரத் தண்ணிழல் பிணையடு வதியும்
வடதிசை யதுவே வான்தோய் இமையம்
தென்திசை ஆஅய் குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
புறநானூறு
கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி நின்
அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து
கூடுவிளங்கு வியன்நகர்ப் பரிசில் முற்று அளிப்பப்
பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யா தாகின்று எம் சிறு செந்நாவே
வன்பரணர்