Tag: எட்டுத்தொகை

  • மென் பாலான் உடன் அணைஇ

    புறநானூறு

    மென் பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
    அறைக் கரும்பின் பூ அருந்தும்
    வன் பாலான் கருங்கால் வரகின்
    _____________________________________
    அங்கண் குறுமுயல் வெருவ அயல
    கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து
    விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து
    ____________கிணையேம் பெரும
    நெல் என்னாம் பொன் என்னாம்
    கனற்றக் கொண்ட நறவு என்னும்
    ____________மனை என்னா அவை பலவும்
    யான் தண்டவும் தான் தண்டான்
    நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
    மண் நாணப் புகழ் வேட்டு
    நீர் நாண நெய் வழங்கிப்
    புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
    அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
    யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
    உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
    வந்த வைகல் அல்லது
    சென்ற எல்லைச் செலவு அறி யேனே

    புறத்திணை நன்னாகனார்

  • ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து

    புறநானூறு

    ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
    நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
    தன்புகழ் ஏத்தினெ னாக ஊன்புலந்து
    அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
    கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்
    தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்
    பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
    கழைபடு சொலியின் இழை அணி வாரா
    ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
    வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
    கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
    எற் பெயர்ந்த நோக்கி _______________
    __________________________ கற்கொண்டு
    அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
    பிறர் பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே
    குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
    நரைமுக வூகமொடு உகளும் சென____
    _______________கன்றுபல கெழீ இய
    கான்கெழு நாடன் நெடுந்தேர் அவியன் என
    ஒருவனை உடையேன் மன்னே யானே
    அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கடல் படை அடல் கொண்டி

    புறநானூறு

    கடல் படை அடல் கொண்டி
    மண் டுற்ற மலிர் நோன்றாள்
    தண் சோழ நாட்டுப் பொருநன்
    அலங்கு உளை அணி இவுளி
    நலங் கிள்ளி நசைப் பொருநரேம்
    பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
    அவற் பாடுதும் அவன் தாள் வாழிய என
    நெய் குய்ய ஊன் நவின்ற
    பல்சோற்றான் இன் சுவைய
    நல் குரவின் பசித் துன்பின் நின்
    முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்
    யானும் ஏழ்மணி யங்கேள் அணிஉத்திக்
    கட்கேள்விக் சுவை நாவின்
    நிறன் உற்ற அரா அப் போலும்
    வறன் ஒரீ இ வழங்கு வாய்ப்ப
    விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
    நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய
    எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
    கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
    எறிதொறும் நுடங்கி யாங்கு நின் பகைஞர்
    கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
    வென்ற தேர் பிறர் வேத்தவை யானே

    கோவூர் கிழார்

  • ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்

    புறநானூறு

    ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்
    சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு என
    யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
    அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
    துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
    பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
    பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
    ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
    சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
    ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
    விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
    இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
    தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
    இருநிலம் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்
    சேயை யாயினும் இவணை யாயினும்
    இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ
    சிறுநனி ஒருவழிப் படர்க என் றோனே எந்தை
    ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
    உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
    அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
    இருங்கோள் ஈராப் பூட்கைக்
    கரும்பன் ஊரன் காதல் மகனே

  • தென் பவ்வத்து முத்துப் பூண்டு

    புறநானூறு

    தென் பவ்வத்து முத்துப் பூண்டு
    வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
    _____________ங்கடல் தானை
    இன்னிசைய விறல் வென்றித்
    தென் னவர் வய மறவன்
    மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
    நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய
    தேறுபெ________________த்துந்து
    தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
    துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
    நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
    வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல
    ___________த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
    அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
    இலம்படு காலை ஆயினும்
    புலம்பல்போ யின்று பூத்தஎன் கடும்பே

  • யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை

    புறநானூறு

    யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை
    அவனே பெறுக என் நாஇசை நுவறல்
    நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
    நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
    வில்லி யாதன் கிணையேம் பெரும
    குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்
    நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
    வல்லன் எந்தை பசிதீர்த்தல் எனக்
    கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    விண்தோய் தலைய குன்றம் பிற்பட
    ____________________ரவந்தனென் யானே
    தாயில் தூவாக் குழவிபோல ஆங்கு அத்
    திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
    வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
    குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே

    புறத்திணை நன்னாகனார்

  • வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்

    புறநானூறு

    வாழும் நாளொடு யாண்டுபல உண்மையின்
    தீர்தல்செல் லாது என் உயிர் எனப் பலபுலந்து
    கோல்கால் ஆகக் குறும்பல ஒதுங்கி
    நூல்விரித் தன்ன கதுப்பினள் கண் துயின்று
    முன்றிற் போகா முதுர்வினள் யாயும்
    பசந்த மேனியொடு படர்அட வருந்தி
    மருங்கில் கொண்ட பல்குறு மாக்கள்
    பிசைந்துதின வாடிய முலையள் பெரிது அழிந்து
    குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
    முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
    நீர்உலை யாக ஏற்றி மோரின்று
    அவிழ்பதம் மறந்து பாசடகு மிசைந்து
    மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியாத்
    துவ்வாள் ஆகிய என்வெய் யோளும்
    என்றாங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர்
    கரிபுனம் மயக்கிய அகன்கண் கொல்லை
    ஐவனம் வித்தி மையுறக் கவினி
    ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக்
    கருவி வானம் தலைஇ யாங்கும்
    ஈத்த நின்புகழ் ஏத்தித் தொக்க என்
    பசிதினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப
    உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்
    தவிர்ந்துவிடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ
    இன்புற விடுதி யாயின் சிறிது
    குன்றியும் கொள்வல் கூர்வேற் குமண
    அதற்பட அருளல் வேண்டுவல் விறற்புகழ்
    வசையில் விழுத்திணைப் பிறந்த
    இசைமேந் தோன்றல் நிற் பாடிய யானே

    பெருஞ்சித்திரனார்

  • பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்

    புறநானூறு

    பதிமுதற் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
    குறுநெடுந் துணையடும் கூமை வீதலிற்
    குடிமுறை பாடி ஒய்யென வருந்தி
    அடல்நசை மறந்தஎம் குழிசி மலர்க்கும்
    கடனறி யாளர் பிறநாட்டு இன்மையின்
    வள்ளன் மையின்எம் வரைவோர் யார் என
    உள்ளிய உள்ளமொடு உலைநசை துணையா
    உலகம் எல்லாம் ஒருபாற் பட்டென
    மலர்தார் அண்ணல்நின் நல்லிசை உள்ளி
    ஈர்ங்கை மறந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    கூர்ந்தஎவ் வம்வீடக் கொழுநிணம் கிழிப்பக்
    கோடைப் பருத்தி வீடுநிறை பெய்த
    மூடைப் பண்டம் மிடைநிறைந் தன்ன
    வெண்நிண மூரி அருள நாளுற
    ஈன்ற அரவின் நாவுருக் கடுக்கும்என்
    தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கிப்
    போதுவிரி பகன்றைப் புதுமலர் அன்ன
    அகன்றுமடி கலிங்கம் உடீஇச் செல்வமும்
    கேடின்று நல்குமதி பெரும மாசில்
    மதிபுரை மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடிக்
    கோடை யாயினும் கோடி _____________
    காவிரி புரக்கும் நன்னாட்டுப் பொருந
    வாய்வாள் வளவன் வாழ்க எனப்
    பீடுகெழு நோன்தாள் பாடுகம் பலவே

    நல்லிறையனார்

  • முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்

    புறநானூறு

    முரசுகடிப்பு இகுப்பவும் வால்வளை துவைப்பவும்
    அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
    கறங்குவெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
    பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசைக்
    கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
    காரி ஊர்ந்து பேரமர்க் கடந்த
    மாரி ஈகை மறப்போர் மலையனும்
    ஊராது ஏந்திய குதிரைக் கூர்வேல்
    கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்
    ஈர்ந்தண் சிலம்பின் இருள் தூங்கும் நளிமுழை
    அருந்திறல் கடவுள் காக்கும் உயர்சிமைப்
    பெருங்கல் நாடன் பேகனும் திருந்து மொழி
    மோசி பாடிய ஆயும் ஆர்வமுற்று
    உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
    தள்ளாது ஈயும் தகைசால் வண்மைக்
    கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு
    எழுவர் மாய்ந்த பின்றை அழி வரப்
    பாடி வருநரும் பிறருங் கூடி
    இரந்தோர் அற்றம் தீர்க்கென விரைந்து இவண்
    உள்ளி வந்தனென் யானே விசும்புஉறக்
    கழைவளர் சிலம்பின் வழையொடு நீடி
    ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று
    முட்புற முதுகனி பெற்ற கடுவன்
    துய்த்தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்
    அதிரா யாணர் முதிரத்துக் கிழவ
    இவண்விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண
    இசைமேந் தோன்றிய வண்மையொடு
    பகைமேம் படுக நீ ஏந்திய வேலே

    பெருஞ்சித்திரனார்

  • தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்

    புறநானூறு

    தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
    பிறர்கை யறவு தான்நா ணுதலும்
    படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
    வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
    நும்மோர்க்குத் தகுவன அல்ல எம்மோன்
    சிலைசெல மலர்ந்த மார்பின் கொலைவேல்
    கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்
    ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
    எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
    கட்சி காணாக் கடமான் நல்லேறு
    மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
    இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
    பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே

    குறமகள் இளவெயினி