Tag: எட்டுத்தொகை

  • கடல் படை அடல் கொண்டி

    புறநானூறு

    கடல் படை அடல் கொண்டி
    மண் டுற்ற மலிர் நோன்றாள்
    தண் சோழ நாட்டுப் பொருநன்
    அலங்கு உளை அணி இவுளி
    நலங் கிள்ளி நசைப் பொருநரேம்
    பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
    அவற் பாடுதும் அவன் தாள் வாழிய என
    நெய் குய்ய ஊன் நவின்ற
    பல்சோற்றான் இன் சுவைய
    நல் குரவின் பசித் துன்பின் நின்
    முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்
    யானும் ஏழ்மணி யங்கேள் அணிஉத்திக்
    கட்கேள்விக் சுவை நாவின்
    நிறன் உற்ற அரா அப் போலும்
    வறன் ஒரீ இ வழங்கு வாய்ப்ப
    விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
    நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய
    எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
    கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
    எறிதொறும் நுடங்கி யாங்கு நின் பகைஞர்
    கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
    வென்ற தேர் பிறர் வேத்தவை யானே

    கோவூர் கிழார்

  • ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்

    புறநானூறு

    ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்
    சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு என
    யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
    அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
    துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
    பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
    பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
    ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
    சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
    ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
    விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
    இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
    தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
    இருநிலம் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்
    சேயை யாயினும் இவணை யாயினும்
    இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ
    சிறுநனி ஒருவழிப் படர்க என் றோனே எந்தை
    ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
    உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
    அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
    இருங்கோள் ஈராப் பூட்கைக்
    கரும்பன் ஊரன் காதல் மகனே

  • தென் பவ்வத்து முத்துப் பூண்டு

    புறநானூறு

    தென் பவ்வத்து முத்துப் பூண்டு
    வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
    _____________ங்கடல் தானை
    இன்னிசைய விறல் வென்றித்
    தென் னவர் வய மறவன்
    மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
    நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய
    தேறுபெ________________த்துந்து
    தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
    துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
    நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
    வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல
    ___________த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
    அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
    இலம்படு காலை ஆயினும்
    புலம்பல்போ யின்று பூத்தஎன் கடும்பே

  • யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை

    புறநானூறு

    யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை
    அவனே பெறுக என் நாஇசை நுவறல்
    நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
    நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
    வில்லி யாதன் கிணையேம் பெரும
    குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்
    நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
    வல்லன் எந்தை பசிதீர்த்தல் எனக்
    கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    விண்தோய் தலைய குன்றம் பிற்பட
    ____________________ரவந்தனென் யானே
    தாயில் தூவாக் குழவிபோல ஆங்கு அத்
    திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
    வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
    குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே

    புறத்திணை நன்னாகனார்

  • தென் பரதவர் மிடல் சாய

    புறநானூறு

    தென் பரதவர் மிடல் சாய
    வட வடுகர் வாள் ஓட்டிய
    தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
    கடுமா கடை இய விடுபரி வடிம்பின்
    நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
    புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
    பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
    அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
    எஞ்சா மரபின் வஞ்சி பாட
    எமக்கென வகுத்த அல்ல மிகப்பல
    மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே அது கண்டு
    இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு
    அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
    இருங்குளைத் தலைமை எய்தி
    அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்

    புறநானூறு

    சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின்
    ஒலிபுனற் கழனி வெண்குடைக் கிழவோன்
    வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன்
    வள்ளிய னாதல் வையகம் புகழினும்
    உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர்
    யானும் இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை
    ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப்
    பாடுஇமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை
    வாடா வஞ்சி பாடினேன் ஆக
    அகமலி உவகையடு அணுகல் வேண்டிக்
    கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின்
    வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி
    யான்அது பெயர்த்தனென் ஆகத் தான்அது
    சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஓர்
    பெருங்களிறு நல்கி யோனே அதற்கொண்டு
    இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும்
    துன்னரும் பரிசில் தரும் என
    என்றும் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • பனி பழுநிய பல் யாமத்துப்

    புறநானூறு

    பனி பழுநிய பல் யாமத்துப்
    பாறு தலை மயிர் நனைய
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
    இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
    அவி உணவினோர் புறங் காப்ப
    அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
    அதற் கொண்டு வரல் ஏத்திக்
    கரவு இல்லாக் கவிவண் கையான்
    வாழ்க எனப் பெயர் பெற்றோர்
    பிறர்க்கு உவமம் பிறர் இல் என
    அது நினைத்து மதி மழுகி
    அங்கு நின்ற எற் காணூஉச்
    சேய் நாட்டுச் செல் கிணைஞனை
    நீபுரவலை எமக்கு என்ன
    மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
    கடல் பயந்த கதிர் முத்தமும்
    வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
    நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
    __________ பொற்கோட்டு யானையர்
    கவர் பரிக் கச்சை நன்மான்
    வடி மணி வாங்கு உருள
    __________ நல்தேர்க் குழுவினர்
    கத ழிசை வன்க ணினர்
    வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
    கடல் ஒலி கொண்ட தானை
    அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே

    உலோச்சனார்

  • மதிஏர் வெண்குடை அதியர் கோமான்

    புறநானூறு

    மதிஏர் வெண்குடை அதியர் கோமான்
    கொடும்பூண் எழினி நெடுங்கடை நின்று யான்
    பசலை நிலவின் பனிபடு விடியல்
    பொருகளிற்று அடிவழி யன்ன என்கை
    ஒருகண் மாக்கிணை ஒற்றுபு கொடாஅ
    உருகெழு மன்னர் ஆர்எயில் கடந்து
    நிணம்படு குருதிப் பெரும்பாட்டு ஈரத்து
    அணங்குடை மரபின் இருங்களந் தோறும்
    வெள்வாய்க் கழுதைப் புல்இனம் பூட்டி
    வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
    வைகல் உழவ வாழிய பெரிது எனச்
    சென்றுயான் நின்றனெ னாக அன்றே
    ஊருண் கேணிப் பகட்டுஇலைப் பாசி
    வேர்புரை சிதாஅர் நீக்கி நேர்கரை
    நுண்ணூற் கலிங்கம் உடீஇ உண்ம் எனத்
    தேட்கடுப்பு அன்ன நாட்படு தேறல்
    கோண்மீன் அன்ன பொலங்கலத்து அளைஇ
    ஊண்முறை ஈத்தல் அன்றியும் கோண்முறை
    விருந்திறை நல்கி யோனே அந்தரத்து
    அரும்பெறல் அமிழ்த மன்ன
    கரும்புஇவண் தந்தோன் பெரும்பிறங் கடையே

    ஔவையார்

  • விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

    புறநானூறு

    விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
    பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
    சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்
    சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்
    பாணர் ஆரும் அளவை யான்தன்
    யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்
    இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
    குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்
    பண்டுஅறி வாரா உருவோடு என் அரைத்
    தொன்றுபடு துளையடு பருஇழை போகி
    நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
    விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை
    நின்ற முரற்கை நீக்கி நன்றும்
    அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
    நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே
    இரவி னானே ஈத்தோன் எந்தை
    அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
    இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்
    உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
    நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
    ஒருநாள் இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
    ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
    தோன்றல் செல்லாது என் சிறுகிணைக் குரலே

    புறத்திணை நன்னாகனார்

  • தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்

    புறநானூறு

    தண்துளி பலபொழிந்து எழிலி இசைக்கும்
    விண்டு அனைய விண்தோய் பிறங்கல்
    முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ்வரப்
    பகடுதரு பெருவளம் வாழ்த்திப் பெற்ற
    திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி
    அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
    வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்தென
    ஈங்குவந்து இறுத்தஎன் இரும்பேர் ஒக்கல்
    தீர்கை விடுக்கும் பண்பின் முதுகுடி
    நனந்தலை மூதூர் வினவலின்
    முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும்
    அளியன் ஆகலின் பொருநன் இவன் என
    நின்னுணர்ந்து அறியுநர் என்உணர்ந்து கூறக்
    காண்கு வந்திசிற் பெரும மாண்தக
    இருநீர்ப் பெருங்கழி நுழைமீன் அருந்தும்
    ததைந்த தூவியம் புதாஅஞ் சேக்கும்
    துதைந்த புன்னைச் செழுநகர் வரைப்பின்
    நெஞ்சமர் காதல் நின்வெய் யோளடு
    இன்துயில் பெறுகதில் நீயே வளஞ்சால்
    துளிபதன் அறிந்து பொழிய
    வேலி ஆயிரம் விளைக நின் வயலே

    கல்லாடனார்