புறநானூறு
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே
_____________________________
புறநானூறு
மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
ஊரது நிலைமையும் இதுவே
_____________________________
புறநானூறு
_____________________________________வி
நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்
பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
வேர்உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து
அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை
வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்
பழுமரம் உள்ளிய பறவை போல
ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்துப்
படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
அதரி திரித்த ஆளுகு கடாவின்
அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி
இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும
வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு
செஞ்செவி எருவை திரிதரும்
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே
ஊன்பொதி பசுங்குடையார்
புறநானூறு
அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
கயலார் நாரை உகைத்த வாளை
புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே
பரணர்
புறநானூறு
இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்
கருங்கை யானை கொண்மூவாக
நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள்மின் நாக வயங்குடிப்பு அமைந்த
குருதிப் பலிய முரசுமுழக் காக
அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
வெவ் விசைப் புரவி வீசுவளி யாக
விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
ஈரச் செறுவயின் தேர்ஏ ராக
விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள
தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
பாடி வந்திசின் பெரும பாடான்று
எழிலி தோயும் இமிழிசை யருவிப்
பொன்னுடை நெடுங்கோட்டு இமையத் தன்ன
ஓடைநுதல ஒல்குதல் அறியாத்
துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகை வெய் யோயே
பரணர்
புறநானூறு
களிறு முகந்து பெயர்குவம் எனினே
ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன
கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே
கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே
கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே
மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி
வளிவழக் கறுத்த வங்கம் போலக்
குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி
இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ
கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்
பாடி வந்த தெல்லாம் கோடியர்
முழவுமருள் திருமணி மிடைந்தநின்
அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே
கழாத் தலையார்
புறநானூறு
நாகத் தன்ன பாகார் மண்டிலம்
தமவே யாயினும் தம்மொடு செல்லா
வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
நாரறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
பரந்து இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக நும் நாளே
ஔவையார்
புறநானூறு
கடல் படை அடல் கொண்டி
மண் டுற்ற மலிர் நோன்றாள்
தண் சோழ நாட்டுப் பொருநன்
அலங்கு உளை அணி இவுளி
நலங் கிள்ளி நசைப் பொருநரேம்
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
அவற் பாடுதும் அவன் தாள் வாழிய என
நெய் குய்ய ஊன் நவின்ற
பல்சோற்றான் இன் சுவைய
நல் குரவின் பசித் துன்பின் நின்
முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்
யானும் ஏழ்மணி யங்கேள் அணிஉத்திக்
கட்கேள்விக் சுவை நாவின்
நிறன் உற்ற அரா அப் போலும்
வறன் ஒரீ இ வழங்கு வாய்ப்ப
விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய
எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
எறிதொறும் நுடங்கி யாங்கு நின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
வென்ற தேர் பிறர் வேத்தவை யானே
கோவூர் கிழார்
புறநானூறு
ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
அளவுபு கலந்து மெல்லிது பருகி
விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்
சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு என
யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
இருநிலம் கூலம் பாறக் கோடை
வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்
சேயை யாயினும் இவணை யாயினும்
இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ
சிறுநனி ஒருவழிப் படர்க என் றோனே எந்தை
ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
இருங்கோள் ஈராப் பூட்கைக்
கரும்பன் ஊரன் காதல் மகனே
புறநானூறு
தென் பவ்வத்து முத்துப் பூண்டு
வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
_____________ங்கடல் தானை
இன்னிசைய விறல் வென்றித்
தென் னவர் வய மறவன்
மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய
தேறுபெ________________த்துந்து
தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல
___________த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
இலம்படு காலை ஆயினும்
புலம்பல்போ யின்று பூத்தஎன் கடும்பே
புறநானூறு
யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை
அவனே பெறுக என் நாஇசை நுவறல்
நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லி யாதன் கிணையேம் பெரும
குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்
நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
வல்லன் எந்தை பசிதீர்த்தல் எனக்
கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
விண்தோய் தலைய குன்றம் பிற்பட
____________________ரவந்தனென் யானே
தாயில் தூவாக் குழவிபோல ஆங்கு அத்
திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே
புறத்திணை நன்னாகனார்