Tag: எட்டுத்தொகை

  • மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்

    புறநானூறு

    மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
    நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
    ஊரது நிலைமையும் இதுவே
    _____________________________

  • வி நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்

    புறநானூறு

    _____________________________________வி
    நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்
    பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
    ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
    வேர்உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து
    அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
    உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
    பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
    கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை
    வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்
    பழுமரம் உள்ளிய பறவை போல
    ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
    துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
    விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்துப்
    படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
    எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
    அதரி திரித்த ஆளுகு கடாவின்
    அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
    வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி
    இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
    வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும
    வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
    தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
    இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
    அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு
    செஞ்செவி எருவை திரிதரும்
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா

    புறநானூறு

    அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
    நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை உகைத்த வாளை
    புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
    ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
    வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே

    பரணர்

  • இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்

    புறநானூறு

    இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்
    கருங்கை யானை கொண்மூவாக
    நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
    வாள்மின் நாக வயங்குடிப்பு அமைந்த
    குருதிப் பலிய முரசுமுழக் காக
    அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
    வெவ் விசைப் புரவி வீசுவளி யாக
    விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
    கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
    ஈரச் செறுவயின் தேர்ஏ ராக
    விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
    செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
    பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
    விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
    பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
    கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
    பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
    பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள
    தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
    வேய்வை காணா விருந்தின் போர்வை
    அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
    பாடி வந்திசின் பெரும பாடான்று
    எழிலி தோயும் இமிழிசை யருவிப்
    பொன்னுடை நெடுங்கோட்டு இமையத் தன்ன
    ஓடைநுதல ஒல்குதல் அறியாத்
    துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
    வேழ முகவை நல்குமதி
    தாழா ஈகைத் தகை வெய் யோயே

    பரணர்

  • களிறு முகந்து பெயர்குவம் எனினே

    புறநானூறு

    களிறு முகந்து பெயர்குவம் எனினே
    ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
    கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன
    கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே
    கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
    நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே
    கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே
    மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி
    வளிவழக் கறுத்த வங்கம் போலக்
    குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே ஆங்க
    முகவை இன்மையின் உகவை இன்றி
    இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
    ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ
    கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
    தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்
    பாடி வந்த தெல்லாம் கோடியர்
    முழவுமருள் திருமணி மிடைந்தநின்
    அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே

    கழாத் தலையார்

  • நாகத் தன்ன பாகார் மண்டிலம்

    புறநானூறு

    நாகத் தன்ன பாகார் மண்டிலம்
    தமவே யாயினும் தம்மொடு செல்லா
    வெற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
    ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்
    பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து
    பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
    நாரறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
    இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி
    வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
    வாழச் செய்த நல்வினை அல்லது
    ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை
    ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப் பாளர்
    முத்தீப் புரையக் காண்தக இருந்த
    கொற்ற வெண்குடக் கொடித்தேர் வேந்திர்
    யான் அறி அளவையோ இவ்வே வானத்து
    வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப்
    பரந்து இயங்கும் மாமழை உறையினும்
    உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக நும் நாளே

    ஔவையார்

  • கடல் படை அடல் கொண்டி

    புறநானூறு

    கடல் படை அடல் கொண்டி
    மண் டுற்ற மலிர் நோன்றாள்
    தண் சோழ நாட்டுப் பொருநன்
    அலங்கு உளை அணி இவுளி
    நலங் கிள்ளி நசைப் பொருநரேம்
    பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
    அவற் பாடுதும் அவன் தாள் வாழிய என
    நெய் குய்ய ஊன் நவின்ற
    பல்சோற்றான் இன் சுவைய
    நல் குரவின் பசித் துன்பின் நின்
    முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்
    யானும் ஏழ்மணி யங்கேள் அணிஉத்திக்
    கட்கேள்விக் சுவை நாவின்
    நிறன் உற்ற அரா அப் போலும்
    வறன் ஒரீ இ வழங்கு வாய்ப்ப
    விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
    நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய
    எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
    கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
    எறிதொறும் நுடங்கி யாங்கு நின் பகைஞர்
    கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
    வென்ற தேர் பிறர் வேத்தவை யானே

    கோவூர் கிழார்

  • ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்

    புறநானூறு

    ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்
    சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு என
    யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
    அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
    துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
    பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
    பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
    ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
    சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
    ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
    விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
    இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
    தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
    இருநிலம் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்
    சேயை யாயினும் இவணை யாயினும்
    இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ
    சிறுநனி ஒருவழிப் படர்க என் றோனே எந்தை
    ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
    உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
    அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
    இருங்கோள் ஈராப் பூட்கைக்
    கரும்பன் ஊரன் காதல் மகனே

  • தென் பவ்வத்து முத்துப் பூண்டு

    புறநானூறு

    தென் பவ்வத்து முத்துப் பூண்டு
    வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
    _____________ங்கடல் தானை
    இன்னிசைய விறல் வென்றித்
    தென் னவர் வய மறவன்
    மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
    நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய
    தேறுபெ________________த்துந்து
    தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
    துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
    நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
    வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல
    ___________த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
    அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
    இலம்படு காலை ஆயினும்
    புலம்பல்போ யின்று பூத்தஎன் கடும்பே

  • யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை

    புறநானூறு

    யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை
    அவனே பெறுக என் நாஇசை நுவறல்
    நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
    நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
    வில்லி யாதன் கிணையேம் பெரும
    குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்
    நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
    வல்லன் எந்தை பசிதீர்த்தல் எனக்
    கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    விண்தோய் தலைய குன்றம் பிற்பட
    ____________________ரவந்தனென் யானே
    தாயில் தூவாக் குழவிபோல ஆங்கு அத்
    திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
    வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
    குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே

    புறத்திணை நன்னாகனார்