Tag: எட்டுத்தொகை

  • மீன் நொடுத்து நெல் குவைஇ

    புறநானூறு

    மீன் நொடுத்து நெல் குவைஇ
    மிசை யம்பியின் மனைமறுக் குந்து
    மனைக் கவைஇய கறிமூ டையால்
    கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
    கலந் தந்த பொற் பரிசம்
    கழித் தொணியான் கரைசேர்க் குந்து
    மலைத் தாரமும் கடல் தாரமும்
    தலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
    புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
    முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன
    நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்
    புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
    தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
    வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
    வருந்தின்று கொல்லோ தானே பருந்துஉயிர்த்து
    இடைமதில் சேக்கும் புரிசைப்
    படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே

    பரணர்

  • கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்

    புறநானூறு

    கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
    மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
    ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று
    என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
    திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
    பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
    பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
    மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
    ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
    கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்
    தன்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
    பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
    கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
    வாள்தக வைகலும் உழக்கும்
    மாட்சி யவர் இவள் தன்னை மாரே

    அரிசில் கிழார்

  • வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு

    புறநானூறு

    வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
    அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
    செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை
    எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
    அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
    ________________________________________________
    புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
    மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
    பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே
    விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
    சுணங்கணி வனமுலை அவளடு நாளை
    மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
    ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்
    நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு
    வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
    படைதொட் டனனே குருசில் ஆயிடைக்
    களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
    பெருங்கவின் இழப்பது கொல்லோ
    மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே

    பரணர்

  • அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்

    புறநானூறு

    அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
    குரலம் குன்றி கொள்ளும் இளையோள்
    மாமகள் __________________
    ________லென வினவுதி கேள் நீ
    எடுப்பவெ ________________
    ___________________ மைந்தர் தந்தை
    இரும்பனை அன்ன பெருங்கை யானை
    கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
    பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தன்னே

  • வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு

    புறநானூறு

    வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
    மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
    வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
    குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
    நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து
    தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
    கடல் ஆடிக் கயம் பாய்ந்து
    கழி நெய்தற் பூக் குறூஉந்து
    பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
    _______________________________ லத்தி
    வளர வேண்டும் அவளே என்றும்
    ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி
    முறஞ்செவி யானை வேந்தர்
    மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே

  • ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்

    புறநானூறு

    ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
    நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின்
    படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
    மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
    கொற்ற வேந்தர் தரினும் தன்தக
    வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
    பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
    உணங்குகலன் ஆழியின் தோன்றும்
    ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே

    குன்றூர் கிழார் மகனார்

  • வி நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்

    புறநானூறு

    _____________________________________வி
    நாரும் போழும் செய்துண்டு ஓராங்குப்
    பசிதினத் திரங்கிய இரும்பே ரொக்கற்கு
    ஆர்பதம் கண்ணென மாதிரம் துழைஇ
    வேர்உழந்து உலறி மருங்கு செத்து ஒழியவந்து
    அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்
    உழுஞ்சில்அம் கவட்டிடை இருந்த பருந்தின்
    பெடைபயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்
    கழைகாய்ந்து உலறிய வறங்கூர் நீள்இடை
    வரிமரல் திரங்கிய கானம் பிற்படப்
    பழுமரம் உள்ளிய பறவை போல
    ஒண்படை மாரி வீழ்கனி பெய்தெனத்
    துவைத்தெழு குருதி நிலமிசைப் பரப்ப
    விளைந்த செழுங்குரல் அரிந்து கால் குவித்துப்
    படுபிணப் பல்போர்பு அழிய வாங்கி
    எருதுகளி றாக வாள்மடல் ஓச்சி
    அதரி திரித்த ஆளுகு கடாவின்
    அகன்கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி
    வெந்திறல் வியன்களம் பொலிக என்று ஏத்தி
    இருப்புமுகம் செறித்த ஏந்து எழில் மருப்பின்
    வரைமருள் முகவைக்கு வந்தனென் பெரும
    வடிநவில் எஃகம் பாய்ந்தெனக் கிடந்த
    தொடியுடைத் தடக்கை ஓச்சி வெருவார்
    இனத்துஅடி விராய வரிக்குடர் அடைச்சி
    அழுகுரற் பேய்மகள் அயரக் கழுகொடு
    செஞ்செவி எருவை திரிதரும்
    அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா

    புறநானூறு

    அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
    நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை உகைத்த வாளை
    புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
    ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
    வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே

    பரணர்

  • இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்

    புறநானூறு

    இருப்புமுகம் செறிந்த ஏந்தொழில் மருப்பின்
    கருங்கை யானை கொண்மூவாக
    நீண்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
    வாள்மின் நாக வயங்குடிப்பு அமைந்த
    குருதிப் பலிய முரசுமுழக் காக
    அரசராப் பனிக்கும் அணங்குறு பொழுதின்
    வெவ் விசைப் புரவி வீசுவளி யாக
    விசைப்புறு வல்வில் வீங்குநாண் உகைத்த
    கணைத்துளி பொழிந்த கண்ணகன் கிடக்கை
    ஈரச் செறுவயின் தேர்ஏ ராக
    விடியல் புக்கு நெடிய நீட்டி நின்
    செருப்படை மிளிர்ந்த திருத்துறு பைஞ்சால்
    பிடித்தெறி வெள்வேல் கணையமொடு வித்தி
    விழுத்தலை சாய்த்த வெருவரு பைங்கூழ்ப்
    பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போர்பு
    கணநரி யோடு கழுதுகளம் படுப்பப்
    பூதங் காப்பப் பொலிகளந் தழீஇப்
    பாடுநர்க்கு இருந்த பீடுடை யாள
    தேய்வை வெண்காழ் புரையும் விசிபிணி
    வேய்வை காணா விருந்தின் போர்வை
    அரிக்குரல் தடாரி உருப்ப ஒற்றிப்
    பாடி வந்திசின் பெரும பாடான்று
    எழிலி தோயும் இமிழிசை யருவிப்
    பொன்னுடை நெடுங்கோட்டு இமையத் தன்ன
    ஓடைநுதல ஒல்குதல் அறியாத்
    துடியடிக் குழவிய பிடியிடை மிடைந்த
    வேழ முகவை நல்குமதி
    தாழா ஈகைத் தகை வெய் யோயே

    பரணர்

  • களிறு முகந்து பெயர்குவம் எனினே

    புறநானூறு

    களிறு முகந்து பெயர்குவம் எனினே
    ஒளிறுமழை தவிர்க்கும் குன்றம் போலக்
    கைம்மா எல்லாம் கணையிடத் தொலைந்தன
    கொடுஞ்சி நெடுந்தேர் முகக்குவம் எனினே
    கடும்பரி நன்மான் வாங்குவயின் ஒல்கி
    நெடும்பீடு அழிந்து நிலம்சேர்ந் தனவே
    கொய்சுவல் புரவி முகக்குவம் எனினே
    மெய்நிறைந்த வடுவொடு பெரும்பிறி தாகி
    வளிவழக் கறுத்த வங்கம் போலக்
    குருதியம் பெரும்புனல் கூர்ந்தனவே ஆங்க
    முகவை இன்மையின் உகவை இன்றி
    இரப்போர் இரங்கும் இன்னா வியன்களத்து
    ஆள்அழிப் படுத்த வாளேர் உழவ
    கடாஅ யானைக் கால்வழி யன்னவென்
    தெடாரித் தெண்கண் தெளிர்ப்ப வொற்றிப்
    பாடி வந்த தெல்லாம் கோடியர்
    முழவுமருள் திருமணி மிடைந்தநின்
    அரவுறழ் ஆரம் முகக்குவம் எனவே

    கழாத் தலையார்