Tag: எட்டுத்தொகை

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்

  • நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்

    புறநானூறு

    நுதிவேல் கொண்டு நுதல்வியர் தொடையாக்
    கடிய கூறும் வேந்தே தந்தையும்
    நெடிய அல்லது பணிந்துமொழி யலனே
    இஃதுஇவர் படிவம் ஆயின் வைஎயிற்று
    அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
    மரம்படு சிறுதீப் போல
    அணங்கா யினள் தான் பிறந்த ஊர்க்கே

    மதுரை மருதனிள நாகனார்

  • நீருள் பட்ட மாரிப் பேருறை

    புறநானூறு

    நீருள் பட்ட மாரிப் பேருறை
    மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
    கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
    உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
    தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
    உண்க என உணரா உயவிற்று ஆயினும்
    தங்கனீர் சென்மோ புலவீர் நன்றும்
    சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
    வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
    குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
    குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன்றோ விலளே தன்னூர்
    வேட்டக் குடிதொறுங் கூட்டு ________
    __________________________ உடும்பு செய்
    பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
    வம்பணி யானை வேந்துதலை வரினும்
    உண்பது மன்னும் அதுவே
    பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே

  • வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்

    புறநானூறு

    வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக்
    கண்மடற் கொண்ட தீந்தேன் இரியக்
    கள்ளரிக்கும் குயம் சிறுசின்
    மீன் சீவும் பாண் சேரி
    வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன
    குவளை உண்கண் இவளைத் தாயே
    ஈனா ளாயினள் ஆயின் ஆனாது
    நிழல்தொறும் நெடுந்தேர் நிற்ப வயின்தொறும்
    செந்நுதல் யானை பிணிப்ப
    வருந்தல மன் எம் பெருந்துறை மரனே

    பரணர்

  • உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில

    புறநானூறு

    உண்போன் தான்நறுங் கள்ளின் இடச்சில
    நாஇடைப் பஃறேர் கோலச் சிவந்த
    ஒளிறுஒள் வாடக் குழைந்தபைந் தும்பை
    எறிந்துஇலை முறிந்த கதுவாய் வேலின்
    மணநாறு மார்பின் மறப்போர் அகுதை
    குண்டுநீர் வரைப்பின் கூடல் அன்ன
    குவைஇருங் கூந்தல் வருமுலை செப்ப
    ____________________________________________
    என்னா வதுகொல் தானே _______
    விளங்குறு பராரைய வாயினும் வேந்தர்
    வினைநவில் யானை பிணிப்ப
    வேர்துளங் கினநம் ஊருள் மரனே

    கபிலர்

  • பிற ள பால் என மடுத்தலின்

    புறநானூறு

    பிற_________ள பால் என மடுத்தலின்
    ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள்
    கல்வியென் என்னும் வல்லாண் சிறாஅன்
    ஒள்வேல் நல்லன் அதுவாய் ஆகுதல்
    அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்
    பேணுநர்ப் பெறாஅது விளியும்
    புன்தலைப் பெரும்பாழ் செயும் இவள் நலனே

    அண்டர் மகன் குறுவழுதி

  • ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த

    புறநானூறு

    ஞாயிற்று அன்ன ஆய்மணி மிடைந்த
    மதியுறழ் ஆரம் மார்பில் புரளப்
    பலிபெறு முரசம் பாசறைச் சிலைப்பப்
    பொழிலகம் பரந்த பெருஞ்செய் ஆடவர்
    செருப்புகன்று எடுக்கும் விசய வெண்கொடி
    அணங்குஉருத் தன்ன கணங்கொள் தானை
    கூற்றத் தன்ன மாற்றரு முன்பன்
    ஆக்குரல் காண்பின் அந்த ணாளர்
    நான்மறை குறித்தன்று அருளாகா மையின்
    அறம்குறித் தன்று பொருளா குதலின்
    மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக்
    கைபெய்த நீர் கடற் பரப்ப
    ஆம் இருந்த அடை நல்கிச்
    சோறு கொடுத்து மிகப் பெரிதும்
    வீறுசான் நன்கலம் வீசி நன்றும்
    சிறுவெள் என்பின் நெடுவெண் களரின்
    வாய்வன் காக்கை கூகையடு கூடிப்
    பகலும் கூவும் அகலுள் ஆங்கண்
    காடுகண் மறைத்த கல்லென் சுற்றமொடு
    இல்என்று இல்வயின் பெயர மெல்ல
    இடஞ்சிறிது ஒதுங்கல் அஞ்சி
    உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே

    சிறுவெண்டேரையார்

  • கார் எதிர் உருமின் உரறிக் கல்லென

    புறநானூறு

    கார் எதிர் உருமின் உரறிக் கல்லென
    ஆருயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்
    நின்வரவு அஞ்சலன் மாதோ நன்பல
    கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு
    அருங்கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத்
    தாயின்நன்று பலர்க்கு ஈத்துத்
    தெருணடை மாகளிறொடு தன்
    அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்
    உருள்நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்றுதன்
    தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்
    புரி மாலையர் பாடி னிக்குப்
    பொலந் தாமரைப் பூம் பாணரொடு
    கலந் தளைஇய நீள் இருக் கையால்
    பொறையடு மலிந்த கற்பின் மான்நோக்கின்
    வில்என விலங்கிய புருவத்து வல்லென
    நல்கின் நாஅஞ்சும் முள்எயிற்று மகளிர்
    அல்குல் தாங்கா அசைஇ மெல்லென
    கலங்கலந் தேறல் பொலங்கலத்து ஏந்தி
    அமிழ்தென மடுப்ப மாந்தி இகழ்விலன்
    நில்லா உலகத்து நிலையாமைநீ
    சொல்லா வேண்டா தோன்றல் முந்துஅறிந்த
    முழுதுஉணர் கேள்வியன் ஆகலின் விரகினானே

  • பெரிது ஆராச் சிறு சினத்தர்

    புறநானூறு

    பெரிது ஆராச் சிறு சினத்தர்
    சில சொல்லால் பல கேள்வியர்
    நுண் ணுணர்வினாற் பெருங் கொடையர்
    கலுழ் நனையால் தண் தேறலர்
    கனி குய்யாற் கொழுந் துவையர்
    தாழ் உவந்து தழூஉ மொழியர்
    பயன் உறுப்பப் பலர்க்கு ஆற்றி
    ஏம மாக இந்நிலம் ஆண்டோர்
    சிலரே பெரும கேள் இனி நாளும்
    பலரே தகை அஃது அறியா தோரே
    அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது
    இன்னும் அற்று அதன் பண்பே அதனால்
    நிச்சமும் ஒழுக்கம் முட்டிலை பரிசில்
    நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்புமதி அச்சுவரப்
    பாறுஇறை கொண்ட பறந்தலை மாகத
    கள்ளி போகிய களரி மருங்கின்
    வெள்ளில் நிறுத்த பின்றைக் கள்ளடு
    புல்லகத்து இட்ட சில்லவிழ் வல்சி
    புலையன் ஏவப் புன்மேல் அமர்ந்துண்டு
    அழல்வாய்ப் புக்க பின்னும்
    பலர்வாய்த்து இராஅர் பகுத்துஉண் டோரே

    சங்க வருணர் என்னும் நாகரியர்

  • பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்

    புறநானூறு

    பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
    வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு
    பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
    பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
    விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
    களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
    ஈம விளக்கின் வெருவரப் பேரும்
    காடுமுன் னினரே நாடுகொண் டோரும்
    நினக்கும் வருதல் வைகல் அற்றே
    வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
    அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்
    நசை வேண்டாது நன்று மொழிந்தும்
    நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு
    பொலம் படைய மா மயங்கிட
    இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
    கொள் என விடுவை யாயின் வெள்ளென
    ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
    ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே

    கரவட்டனார்