Tag: எட்டுத்தொகை

  • பிறர்வேல் போலா தாகி இவ்வூர்

    புறநானூறு

    பிறர்வேல் போலா தாகி இவ்வூர்
    மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
    இரும்புறம் நீறும் ஆடிக் கலந்துஇடைக்
    குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்
    மங்கல மகளிரொடு மாலை சூட்டி
    இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
    தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து
    மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும் ஆங்கு
    இருங்கடல் தானை வேந்தர்
    பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே

    விரியூர் கிழார்

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்

    புறநானூறு

    கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
    வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
    நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
    புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா இடையன் போலக் குறிப்பின்
    இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
    தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
    நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
    இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில்
    வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின்
    காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
    போகுபலி வெண்சோறு போலத்
    தூவவும் வல்லன் அவன் தூவுங் காலே

    உறையூர் முதுகூத்தனார்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

    புறநானூறு

    வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
    தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங் கடற்கு
    ஆழி அனையன் மாதோ என்றும்
    பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
    புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
    தொன்மை சுட்டிய வண்மை யோனே

    மதுரை கணக்காயனார்

  • பூவற் படுவிற் கூவல் தோண்டிய

    புறநானூறு

    பூவற் படுவிற் கூவல் தோண்டிய
    செங்கண் சின்னீர் பெய்த சீறில்
    முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
    யாம் க·டு உண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
    புறவும் இதலும் அறவும் உண்கெனப்
    பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
    முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
    ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
    புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
    சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

    ஆலங்குடி வங்கனார்

  • களிறு அணைப்பக் கலங்கின காஅ

    புறநானூறு

    களிறு அணைப்பக் கலங்கின காஅ
    தேர்ஓடத் துகள் கெழுமின தெருவு
    மா மறுகலின் மயக்குற்றன வழி
    கலங் கழாஅலின் துறை கலக்குற்றன
    தெறல் மறவர் இறை கூர்தலின்
    பொறை மலிந்து நிலன் நெளிய
    வந்தோர் பலரே வம்ப வேந்தர்
    பிடிஉயிர்ப் பன்ன கைகவர் இரும்பின்
    ஓவுறழ் இரும்புறம் காவல் கண்ணிக்
    கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை
    மையல் நோக்கின் தையலை நயந்தோர்
    அளியர் தாமே இவள் தன்னை மாரே
    செல்வம் வேண்டார் செருப்புகல் வேண்டி
    நிரல்அல் லோர்க்குத் தரலோ இல் எனக்
    கழிப்பிணிப் பலகையர் கதுவாய் வாளர்
    குழாஅங் கொண்ட குருதிஅம் புலவொடு
    கழாஅத் தலையர் கருங்கடை நெடுவேல்
    இன்ன மறவர்த் தாயினும் அன்னோ
    என்னா வதுகொல் தானே
    பன்னல் வேலிஇப் பணைநல் லூரே

  • செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை

    புறநானூறு

    செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை
    செறிவளை மகளிர் பறந்தெழுந்து
    துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு
    நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ
    புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து
    பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ
    இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே
    காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி
    கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே

  • மீன் நொடுத்து நெல் குவைஇ

    புறநானூறு

    மீன் நொடுத்து நெல் குவைஇ
    மிசை யம்பியின் மனைமறுக் குந்து
    மனைக் கவைஇய கறிமூ டையால்
    கலிச் சும்மைய கரைகலக் குறுந்து
    கலந் தந்த பொற் பரிசம்
    கழித் தொணியான் கரைசேர்க் குந்து
    மலைத் தாரமும் கடல் தாரமும்
    தலைப் பெய்து வருநர்க்கு ஈயும்
    புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
    முழங்கு கடல் முழவின் முசிறி யன்ன
    நலஞ்சால் விழுப்பொருள் பணிந்து கொடுப்பினும்
    புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத்
    தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர்
    வாய்ப்ப இறுத்த ஏணி ஆயிடை
    வருந்தின்று கொல்லோ தானே பருந்துஉயிர்த்து
    இடைமதில் சேக்கும் புரிசைப்
    படைமயங்கு ஆரிடை நெடுநல் ஊரே

    பரணர்

  • கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்

    புறநானூறு

    கானக் காக்கைக் கலிச்சிறகு ஏய்க்கும்
    மயிலைக் கண்ணிப் பெருந்தோட் குறுமகள்
    ஏனோர் மகள்கொல் இவள் என விதுப்புற்று
    என்னொடு வினவும் வென்வேல் நெடுந்தகை
    திருநயத் தக்க பண்பின் இவள் நலனே
    பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே
    பைங்கால் கொக்கின் பகுவாய்ப் பிள்ளை
    மென்சேற்று அடைகரை மேய்ந்துஉண் டதற்பின்
    ஆரல் ஈன்ற ஐயவி முட்டை
    கூர்நல் இறவின் பிள்ளையடு பெறூஉம்
    தன்பணைக் கிழவன்இவள் தந்தையும் வேந்தரும்
    பெறாஅ மையின் பேரமர் செய்தலின்
    கழிபிணம் பிறங்கு போர்பு அழிகளிறு எருதா
    வாள்தக வைகலும் உழக்கும்
    மாட்சி யவர் இவள் தன்னை மாரே

    அரிசில் கிழார்