புறநானூறு
பூவற் படுவிற் கூவல் தோண்டிய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாம் க·டு உண்டென வறிது மாசின்று
படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
பாடினி மாலை யணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே
ஆலங்குடி வங்கனார்