Tag: எட்டுத்தொகை

  • எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற

    புறநானூறு

    எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற
    சில்விளை வரகின் புல்லென் குப்பை
    தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
    பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்
    ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
    சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
    வரகுடன் இரக்கும் நெடுந்தகை
    அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே

  • ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்

    புறநானூறு

    ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
    இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
    உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
    சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
    பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
    கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
    அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே

    தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

  • களிறுநீ றாடிய விடுநில மருங்கின்

    புறநானூறு

    களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
    வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்
    குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்
    செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
    முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
    முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
    உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
    சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
    கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
    மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
    அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
    கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
    அருமிளை இருக்கை யதுவே வென்வேல்ஊரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்

    புறநானூறு

    வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
    புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
    வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
    சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
    ஊக நுண்கோற் செறித்த அம்பின்
    வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
    பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
    புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
    குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
    வெண்வாழ் தாய வண்காற் பந்தர்
    இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
    பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
    வலம்படு தானை வேந்தற்கு
    உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே

    ஆலத்தூர் கிழார்

  • புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

    புறநானூறு

    புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
    கா ____________________________க்கு
    உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
    வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
    கறையடி யானைக்கு அல்லது
    உறைகழிப் பறியாவேலோன் ஊரே

  • பிறர்வேல் போலா தாகி இவ்வூர்

    புறநானூறு

    பிறர்வேல் போலா தாகி இவ்வூர்
    மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
    இரும்புறம் நீறும் ஆடிக் கலந்துஇடைக்
    குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்
    மங்கல மகளிரொடு மாலை சூட்டி
    இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
    தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து
    மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும் ஆங்கு
    இருங்கடல் தானை வேந்தர்
    பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே

    விரியூர் கிழார்

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்

    புறநானூறு

    கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
    வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
    நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
    புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா இடையன் போலக் குறிப்பின்
    இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
    தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
    நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
    இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில்
    வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின்
    காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
    போகுபலி வெண்சோறு போலத்
    தூவவும் வல்லன் அவன் தூவுங் காலே

    உறையூர் முதுகூத்தனார்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

    புறநானூறு

    வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
    தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங் கடற்கு
    ஆழி அனையன் மாதோ என்றும்
    பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
    புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
    தொன்மை சுட்டிய வண்மை யோனே

    மதுரை கணக்காயனார்