Tag: எட்டுத்தொகை

  • புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

    புறநானூறு

    புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
    கா ____________________________க்கு
    உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
    வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
    கறையடி யானைக்கு அல்லது
    உறைகழிப் பறியாவேலோன் ஊரே

  • பிறர்வேல் போலா தாகி இவ்வூர்

    புறநானூறு

    பிறர்வேல் போலா தாகி இவ்வூர்
    மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே
    இரும்புறம் நீறும் ஆடிக் கலந்துஇடைக்
    குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்
    மங்கல மகளிரொடு மாலை சூட்டி
    இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத்
    தெண்ணீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து
    மண்முழுது அழுங்கச் செல்லினும் செல்லும் ஆங்கு
    இருங்கடல் தானை வேந்தர்
    பெருங்களிற்று முகத்தினும் செலவு ஆனாதே

    விரியூர் கிழார்

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்

    புறநானூறு

    கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
    வில்லேர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
    நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
    புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
    கல்லா இடையன் போலக் குறிப்பின்
    இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது
    தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
    நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
    இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில்
    வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின்
    காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
    போகுபலி வெண்சோறு போலத்
    தூவவும் வல்லன் அவன் தூவுங் காலே

    உறையூர் முதுகூத்தனார்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • வேந்துடைத் தானை முனைகெட நெரிதர

    புறநானூறு

    வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
    ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
    தன்இறந்து வாராமை விலக்கலின் பெருங் கடற்கு
    ஆழி அனையன் மாதோ என்றும்
    பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்
    புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
    தொன்மை சுட்டிய வண்மை யோனே

    மதுரை கணக்காயனார்

  • பூவற் படுவிற் கூவல் தோண்டிய

    புறநானூறு

    பூவற் படுவிற் கூவல் தோண்டிய
    செங்கண் சின்னீர் பெய்த சீறில்
    முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
    யாம் க·டு உண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
    புறவும் இதலும் அறவும் உண்கெனப்
    பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
    முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
    ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
    புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
    சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

    ஆலங்குடி வங்கனார்

  • இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்

    புறநானூறு

    இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
    இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே
    நல்லரா உறையும் புற்றம் போலவும்
    கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
    மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
    உளன் என வெரூஉம் ஓர்ஒளி
    வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே

    மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

  • கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க

    புறநானூறு

    கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
    மயில்அம் சாயல் மாஅ யோளடு
    பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
    மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
    குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
    புன்புறப் பெடையடு வதியும்
    யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

    பெருங்குன்றூர் கிழார்

  • அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்

    புறநானூறு

    அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
    கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சிக்
    காணிய சென்ற இரவன் மாக்கள்
    களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவ
    உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
    கழிமுரி குன்றத்து அற்றே
    எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே

    மாங்குடி மருதனார்