Tag: எட்டுத்தொகை

  • எமக்கே கலங்கல் தருமே தானே

    புறநானூறு

    எமக்கே கலங்கல் தருமே தானே
    தேறல் உண்ணும் மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே இனியே
    நேரார் ஆரெயில் முற்றி
    வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே

  • மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்

    புறநானூறு

    மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
    முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
    நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
    புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
    குடியும் மன்னுந் தானே கொடியெடுத்து
    நிறையழிந்து எழுதரு தானைக்குச்
    சிறையும் தானே தன் இறைவிழு முறினே

    ஐயூர் முடவனார்

  • பெருநீர் மேவல் தண்ணடை எருமை

    புறநானூறு

    பெருநீர் மேவல் தண்ணடை எருமை
    இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
    பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
    கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
    நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
    துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
    தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

  • முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்

    புறநானூறு

    முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
    பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
    கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
    பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
    தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
    இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
    கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
    பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
    இவ்வழங் காமையின் கல்லென ஒலித்து
    மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
    கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
    ஆர நெருப்பின் ஆரல் நாறத்
    தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
    இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
    தங்கினை சென்மோ பாண தங்காது
    வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    வீரை வெளியனார்

  • ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    புறநானூறு

    ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
    களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

    பொன்முடியார்

  • களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

    புறநானூறு

    களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
    புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
    தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
    பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
    ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
    சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
    தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே

    ஔவையார்

  • எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற

    புறநானூறு

    எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற
    சில்விளை வரகின் புல்லென் குப்பை
    தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
    பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்
    ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
    சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
    வரகுடன் இரக்கும் நெடுந்தகை
    அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே

  • ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்

    புறநானூறு

    ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
    இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
    உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
    சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
    பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
    கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
    அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே

    தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

  • களிறுநீ றாடிய விடுநில மருங்கின்

    புறநானூறு

    களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
    வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்
    குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்
    செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
    முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
    முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
    உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
    சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
    கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
    மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
    அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
    கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
    அருமிளை இருக்கை யதுவே வென்வேல்ஊரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்

    புறநானூறு

    வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
    புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
    வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
    சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
    ஊக நுண்கோற் செறித்த அம்பின்
    வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
    பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
    புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
    குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
    வெண்வாழ் தாய வண்காற் பந்தர்
    இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
    பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
    வலம்படு தானை வேந்தற்கு
    உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே

    ஆலத்தூர் கிழார்