Tag: எட்டுத்தொகை

  • நீரறவு அறியா நிலமுதற் கலந்த

    புறநானூறு

    நீரறவு அறியா நிலமுதற் கலந்த
    கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
    மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்
    தொடலை ஆகவும் கண்டனம் இனியே
    வெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்து
    ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
    பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
    மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

    காமக்கண்ணியார்

  • பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்

    புறநானூறு

    பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
    இரங்கு முரசின் இனம்சால் யானை
    நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
    சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
    நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
    சிறுவர் தாயே பேரிற் பெண்டே
    நோகோ யானே நோக்குமதி நீயே
    மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
    இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
    வென்றிதரு வேட்கையர் மன்றம் கொண்மார்
    பேரமர் உழந்த வெருவரு பறந்தலை
    விழுநவி பாய்ந்த மரத்தின்
    வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே

    கழாத்தலையார்

  • குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்

    புறநானூறு

    குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
    பயிலாது அல்கிய பல்காழ் மாலை
    மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
    புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
    ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை
    உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
    பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றிது
    கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக்
    கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
    பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்
    கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத்
    தடிந்துமாறு பெயர்த்தது இக் கருங்கை வாளே

    ஔவையார்

  • பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்

    புறநானூறு

    பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
    கயங்களி முளியும் கோடை ஆயினும்
    புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
    கதிர்கோட்டு நந்தின் கரிமுக ஏற்றை
    நாகுஇள வளையடு பகல்மணம் புகூஉம்
    நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
    வான்தோய் நீள்குடை வயமான் சென்னி
    சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
    ஆசாகு என்னும் பூசல்போல
    வல்லே களைமதி அத்தை உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே

    பெருங்குன்றூர் கிழார்

  • ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை

    புறநானூறு

    ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
    ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
    போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
    பல்ஆன் கோவலர் படலை சூட்டக்
    கல்ஆ யினையே-கடுமான் தோன்றல்
    வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
    பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
    கடும்பகட்டு யானை வேந்தர்
    ஒடுங்க வென்றியும் நின்னொடு செலவே

    சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்

  • பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி

    புறநானூறு

    பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
    மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியடு
    அணிமயிற் பீலி சூட்டிப் பெயர்பொறித்து
    இனிநட் டனரே கல்லும் கன்றொடு
    கறவை தந்து பகைவர் ஓட்டிய
    நெடுந்தகை கழிந்தமை அறியாது
    இன்றும் வருங்கொல் பாணரது கடும்பே

    உறையூர் இளம்பொன் வாணிகனார்

  • தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

    புறநானூறு

    தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
    ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
    இசைமணி எறிந்து காஞ்சி பாடி
    நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழீ
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

    அரிசில் கிழார்

  • வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்

    புறநானூறு

    வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
    நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
    எல்லா மனையும் கல்லென் றவ்வே
    வெந்துஉடன்று எறிவான் கொல்லோ
    நெடிதுவந் தன்றால் நெடுந்தகை தேரே

    வெள்ளை மாளர்

  • என்னை மார்பிற் புண்ணும் வெய்ய

    புறநானூறு

    என்னை மார்பிற் புண்ணும் வெய்ய
    நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்
    நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா
    துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்
    அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்
    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா
    துடிய பாண பாடுவல் விறலி
    என்ஆ குவிர்கொல் அளியிர் நுமக்கும்
    இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும்
    மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
    தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
    சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
    கழிகல மகளிர் போல
    வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்

    புறநானூறு

    கடல்கிளர்ந் தன்ன கட்டூர் நாப்பண்
    வெந்துவாய் மடித்து வேல்தலைப் பெயரித்
    தோடுஉகைத்து எழுதரூஉ துரந்துஎறி ஞாட்பின்
    வருபடை போழ்ந்து வாய்ப்பட விலங்கி
    இடைப்படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய
    சிறப்புடை யாளன் மாண்புகண் டருவி
    வாடுமுலை ஊறிச் சுரந்தன
    ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே

    ஔவையார்