Tag: எட்டுத்தொகை

  • பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

    புறநானூறு

    பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
    விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா
    இரவல் மாக்களும்

  • இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

    புறநானூறு

    இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
    செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
    தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
    தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
    மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
    உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
    அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ-
    தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
    இருமிடை மிடைந்த சிலசொல்
    பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே

    தொடித்தலை விழுத்தண்டினார்

  • இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

    புறநானூறு

    இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
    நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி அணியாள்
    ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
    வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

    குடவாயிற் தீரத்தனார்

  • திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்

    புறநானூறு

    திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
    அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
    வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
    போர்ப்புறு முரசும் கறங்க
    ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

    புறநானூறு

    ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்
    வாடா யாணர் நாடும் ஊரும்
    பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
    கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
    காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
    மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்
    பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
    சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
    கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
    ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது
    புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
    கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
    வாடிய பசியர் ஆகிப் பிறர்
    நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

    குட்டுவன் கீரனார்

  • தொடி யுடைய தோள் மணந்தணன்

    புறநானூறு

    தொடி யுடைய தோள் மணந்தணன்
    கடி காவிற் பூச் சூடினன்
    தண் கமழுஞ் சாந்து நீவினன்
    செற் றோரை வழி தபுத்தனன்
    நட் டோரை உயர்பு கூறினன்
    வலியரென வழி மொழியலன்
    மெலியரென மீக் கூறலன்
    பிறரைத் தான் இரப் பறியலன்
    இரந் தோர்க்கு மறுப் பறியலன்
    வேந்துடை அவையத்து ஓங்குபுகழ் தோற்றினன்
    வருபடை எதிர் தாங்கினன்
    பெயர் படை புறங் கண்டனன்
    கடும் பரிய மாக் கடவினன்
    நெடுந் தெருவில் தேர் வழங்கினன்
    ஓங்கு இயற் களிறு ஊர்ந்தனன்
    தீஞ் செறி தசும்பு தொலைச்சினன்
    பாண் உவப்பப் பசி தீர்த்தனன்
    மயக்குடைய மொழி விடுத்தனன் ஆங்குச்
    செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
    இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ
    படுவழிப் படுக இப் புகழ்வெய்யோன் தலையே

    பேரெயின் முறுவலார்

  • மாவா ராதே மாவா ராதே

    புறநானூறு

    மாவா ராதே மாவா ராதே
    எல்லார் மாவும் வந்தன எம்இல்
    புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
    செல்வன் ஊரும் மாவா ராதே
    இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
    விலங்கிடு பெருமரம் போல
    உலந்தன்று கொல் அவன் மலைந்த மாவே

    எருமை வெளியனார்

  • ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே

    புறநானூறு

    ஐயோ எனின்யான் புலி அஞ்சுவலே
    அணைத்தனன் கொளினே அகன்மார்பு எடுக்கல்லேன்
    என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
    இன்னாது உற்ற அறனில் கூற்றே
    திரைவளை முன்கை பற்றி
    வரைநிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே

    வன்பரணர்

  • மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

    புறநானூறு

    மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி
    போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
    காதல் நன்மரம் நீ நிழற் றிசினே
    கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
    தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
    காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
    ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
    பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே

    மோசிசாத்தனார்

  • நீரறவு அறியா நிலமுதற் கலந்த

    புறநானூறு

    நீரறவு அறியா நிலமுதற் கலந்த
    கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
    மெல்இழை மகளிர் ஐதகல் அல்குல்
    தொடலை ஆகவும் கண்டனம் இனியே
    வெருவரு குருதியடு மயங்கி உருவுகரந்து
    ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
    பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்
    மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே

    காமக்கண்ணியார்