Tag: எட்டுத்தொகை

  • தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய

    புறநானூறு

    தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய
    இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
    கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
    நிலமார் வையத்து வலமுறை வளைஇ
    வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடு
    ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
    சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்
    இன்னிசைப் பறையடு வென்றி நுவலத்
    தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
    ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
    ஞாலங் காவலர் கடைத்தலைக்
    காலைத் தோன்றினும் நோகோ யானே

    ஆலத்தூர் கிழார்

  • அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்

    புறநானூறு

    அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்
    துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
    இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
    அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து
    முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
    பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
    பருதி உருவின் பல்படைப் புரிசை
    எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
    வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
    அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்
    இறந்தோன் தானே அளித்துஇவ் வுலகம்
    அருவி மாறி அஞ்சுவரக் கருகிப்
    பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்
    பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
    பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
    கொய்துகட்டு அழித்த வேங்கையின்
    மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே

    கருங்குழல் ஆதனார்

  • பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்

    புறநானூறு

    பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்
    தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
    நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
    இடங் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
    இன்னுயிர் விரும்பும் கிழமைத்
    தொன்னட் புடையார் தம்உழைச் செலினே

    பொத்தியார்

  • அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

    புறநானூறு

    அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
    நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
    புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என
    என்இவண் ஒழித்த அன்பி லாள
    எண்ணாது இருக்குவை அல்லை
    என்னிடம் யாது மற்று இசைவெய் யோயே

    பொத்தியார்

  • பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

    புறநானூறு

    பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே
    ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே
    அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே
    திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே
    மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
    துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
    அனையன் என்னாது அத்தக் கோனை
    நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று
    பைதல் ஒக்கல் தழீஇ அதனை
    வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
    நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
    கெடுவில் நல்லிசை சூடி
    நடுகல் ஆயினன் புரவலன் எனவே

    பொத்தியார்

  • பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த

    புறநானூறு

    பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
    பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
    அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
    வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
    கலங்கினேன் அல்லனோ யானே-பொலந்தார்த்
    தேர்வண் கிள்ளி போகிய
    பேரிசை மூதூர் மன்றங் கண்டே

    பொத்தியார்

  • உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்

    புறநானூறு

    உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
    முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
    புலவுதி மாதோ நீயே
    பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

    பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்

  • ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்

    புறநானூறு

    ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
    பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
    இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிக்கும்
    கழைக்கண் நெடுவரை அருவியாடிக்
    கான யானை தந்த விறகின்
    கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
    புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே

    மாற்பித்தியார்

  • குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்

    புறநானூறு

    குய்குரல் மலிந்த கொழுந்துவை அடிசில்
    இரவலர்த் தடுத்த வாயிற் புரவலர்
    கண்ணீர்த் தடுத்த தண்ணறும் பந்தர்க்
    கூந்தல் கொய்து குறுந்தொடு நீக்கி
    அல்லி உணவின் மனைவியடு இனியே
    புல்என் றனையால் வளங்கெழு திருநகர்
    வான் சோறு கொண்டு தீம்பால் வேண்டும்
    முனித்தலைப் புதல்வர் தந்தை
    தனித்தலைப் பெருங்காடு முன்னிய பின்னே

    தாயங் கண்ணியார்

  • கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்

    புறநானூறு

    கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்
    கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
    எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
    அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
    பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
    உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்
    அகல்நாட்டு அண்ணல் புகாவே நெருநைப்
    பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி
    ஒருவழிப் பட்டன்று மன்னே இன்றே
    அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
    உயர்நிலை உலகம் அவன்புக வரி
    நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
    அழுதல் ஆனாக் கண்ணள்
    மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே

    தும்பிசேர் கீரனார்