Tag: எட்டுத்தொகை

  • பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்

    புறநானூறு

    பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்
    தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
    நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
    இடங் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
    இன்னுயிர் விரும்பும் கிழமைத்
    தொன்னட் புடையார் தம்உழைச் செலினே

    பொத்தியார்

  • அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

    புறநானூறு

    அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
    நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
    புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என
    என்இவண் ஒழித்த அன்பி லாள
    எண்ணாது இருக்குவை அல்லை
    என்னிடம் யாது மற்று இசைவெய் யோயே

    பொத்தியார்

  • பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

    புறநானூறு

    பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே
    ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே
    அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே
    திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே
    மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
    துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
    அனையன் என்னாது அத்தக் கோனை
    நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று
    பைதல் ஒக்கல் தழீஇ அதனை
    வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
    நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
    கெடுவில் நல்லிசை சூடி
    நடுகல் ஆயினன் புரவலன் எனவே

    பொத்தியார்

  • பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த

    புறநானூறு

    பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
    பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
    அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
    வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
    கலங்கினேன் அல்லனோ யானே-பொலந்தார்த்
    தேர்வண் கிள்ளி போகிய
    பேரிசை மூதூர் மன்றங் கண்டே

    பொத்தியார்

  • உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்

    புறநானூறு

    உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
    முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
    புலவுதி மாதோ நீயே
    பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

    பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்

  • நோகோ யானே தேய்கமா காலை

    புறநானூறு

    நோகோ யானே தேய்கமா காலை
    பிடி அடி அன்ன சிறுவழி மெழுகித்
    தன்அமர் காதலி புன்மேல் வைத்த
    இன்சிறு பிண்டம் யாங்குஉண் டனன்கொல்
    உலகுபுகத் திறந்த வாயில்
    பலரோடு உண்டல் மரீஇ யோனே

    வெள்ளெருக்கிலையார்

  • பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

    புறநானூறு

    பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
    ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே

    கண்ணகனார் நத்தத்தனார்

  • பொய்யா கியரோ பொய்யா கியரோ

    புறநானூறு

    பொய்யா கியரோ பொய்யா கியரோ
    பாவடி யானை பரிசிலர்க்கு அருகாச்
    சீர்கெழு நோன்றாள் அகுதைகண் தோன்றிய
    பொன்புனை திகிரியின் பொய்யா கியரோ
    இரும்பாண் ஒக்கல் தலைவன் பெரும்பூண்
    போர்அடு தானை எவ்வி மார்பின்
    எ·குஉறு விழுப்புண் பல என
    வைகறு விடியல் இயம்பிய குரலே

    வெள்ளெருக்கிலையார்

  • நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

    புறநானூறு

    நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
    எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
    அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
    தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
    இசைமரபு ஆக நட்புக் கந்தாக
    இனையதோர் காலை ஈங்கு வருதல்
    வருவன் என்ற கோனது பெருமையும்
    அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
    அதனால் தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
    சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
    அன்னோனை இழந்தஇவ் வுலகம்
    என்னா வதுகொல் அளியது தானே

    பொத்தியார்

  • இல்லா கியரோ காலை மாலை

    புறநானூறு

    இல்லா கியரோ காலை மாலை
    அல்லா கியர் யான் வாழும் நாளே
    நடுகல் பீலி சூட்டி நார்அரி
    சிறுகலத்து உகுப்பவும் கொள்வன் கொல்லொ-
    கோடு உயர் பிறங்குமலை கெழீஇய
    நாடு உடன் கொடுப்புவும் கொள்ளா தோனே

    ஔவையார்