Tag: வெண்பா

  • வள் உகிர வயல் ஆமை

    புறநானூறு

    வள் உகிர வயல் ஆமை
    வெள் அகடு கண் டன்ன
    வீங்கு விசிப் புதுப் போர்வைத்
    தெண்கண் மாக்கிணை இயக்கி என்றும்
    மாறு கொண்டோர் மதில் இடறி
    நீறு ஆடிய நறுங் கவுள
    பூம்பொறிப் பணை எருத்தின
    வேறு வேறு பரந்து இயங்கி
    வேந்துடை மிளை அயல் பரக்கும்
    ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்
    திருந்து தொழிற் பல பகடு
    பகைப்புல மன்னர் பணிதிறை தந்து நின்
    நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி
    மிகப்பொலியர் தன் சேவடியத்தை என்று
    யாஅன் இசைப்பின் நனிநன்று எனாப்
    பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்
    மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்
    திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
    வென் றிரங்கும் விறன் முரசினோன்
    என் சிறுமையின் இழித்து நோக்கான்
    தன் பெருமையின் தகவு நோக்கிக்
    குன்று உறழ்ந்த களி றென்கோ
    கொய் யுளைய மா என்கோ
    மன்று நிறையும் நிரை என்கோ
    மனைக் களமரொடு களம் என்கோ
    ஆங்கவை கனவுஎன மருள வல்லே நனவின்
    நல்கி யோனே நகைசால் தோன்றல்
    ஊழி வாழி பூழியர் பெருமகன்
    பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
    செல்வக் கடுங்கோ வாழி யாதன்
    ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து இவன்
    விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
    புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
    கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
    பல்லூர் சுற்றிய கழனி
    எல்லாம் விளையும் நெல்லினும் பலவே

    குண்டுகட் பாலியாதனார்

  • நெடு நீர நிறை கயத்துப்

    புறநானூறு

    நெடு நீர நிறை கயத்துப்
    படு மாரித் துளி போல
    நெய் துள்ளிய வறை முகக்கவும்
    சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்
    ஊன் கொண்ட வெண் மண்டை
    ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
    வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
    செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
    ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
    வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
    பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின
    புறவே புல்லருந்து பல்லா யத்தான்
    வில்இருந்த வெங்குறும் பின்று
    கடலே கால்தந்த கலம் எண்ணுவோர்
    கானற் புன்னைச் சினைநிலக் குந்து
    கழியே சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
    பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து
    அன்னநன் நாட்டுப் பொருநம் யாமே
    பொரா அப் பொருந ரேம்
    குணதிசை நின்று குடமுதற் செலினும்
    வடதிசை நின்று தென்வயிற் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க வெள்ளி யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே

    கோவூர் கிழார்

  • வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப

    புறநானூறு

    வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
    புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
    தன்கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
    அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
    வறன்யான் நீங்கல் வேண்டி என் அரை
    நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
    வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
    காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
    நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
    நல்அரு வந்தை வாழியர் புல்லிய
    வேங்கட விறல்வரைப் பட்ட
    ஓங்கல் வானத்து உறையினும் பலவே

    கல்லாடனார்

  • மென் பாலான் உடன் அணைஇ

    புறநானூறு

    மென் பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
    அறைக் கரும்பின் பூ அருந்தும்
    வன் பாலான் கருங்கால் வரகின்
    _____________________________________
    அங்கண் குறுமுயல் வெருவ அயல
    கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து
    விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து
    ____________கிணையேம் பெரும
    நெல் என்னாம் பொன் என்னாம்
    கனற்றக் கொண்ட நறவு என்னும்
    ____________மனை என்னா அவை பலவும்
    யான் தண்டவும் தான் தண்டான்
    நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
    மண் நாணப் புகழ் வேட்டு
    நீர் நாண நெய் வழங்கிப்
    புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
    அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
    யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
    உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
    வந்த வைகல் அல்லது
    சென்ற எல்லைச் செலவு அறி யேனே

    புறத்திணை நன்னாகனார்

  • ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து

    புறநானூறு

    ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
    நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
    தன்புகழ் ஏத்தினெ னாக ஊன்புலந்து
    அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
    கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்
    தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்
    பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
    கழைபடு சொலியின் இழை அணி வாரா
    ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
    வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
    கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
    எற் பெயர்ந்த நோக்கி _______________
    __________________________ கற்கொண்டு
    அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
    பிறர் பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே
    குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
    நரைமுக வூகமொடு உகளும் சென____
    _______________கன்றுபல கெழீ இய
    கான்கெழு நாடன் நெடுந்தேர் அவியன் என
    ஒருவனை உடையேன் மன்னே யானே
    அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • கடல் படை அடல் கொண்டி

    புறநானூறு

    கடல் படை அடல் கொண்டி
    மண் டுற்ற மலிர் நோன்றாள்
    தண் சோழ நாட்டுப் பொருநன்
    அலங்கு உளை அணி இவுளி
    நலங் கிள்ளி நசைப் பொருநரேம்
    பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
    அவற் பாடுதும் அவன் தாள் வாழிய என
    நெய் குய்ய ஊன் நவின்ற
    பல்சோற்றான் இன் சுவைய
    நல் குரவின் பசித் துன்பின் நின்
    முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்
    யானும் ஏழ்மணி யங்கேள் அணிஉத்திக்
    கட்கேள்விக் சுவை நாவின்
    நிறன் உற்ற அரா அப் போலும்
    வறன் ஒரீ இ வழங்கு வாய்ப்ப
    விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
    நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய
    எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
    கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
    எறிதொறும் நுடங்கி யாங்கு நின் பகைஞர்
    கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
    வென்ற தேர் பிறர் வேத்தவை யானே

    கோவூர் கிழார்

  • ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்

    புறநானூறு

    ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்
    சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு என
    யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
    அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
    துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
    பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
    பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
    ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
    சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
    ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
    விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
    இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
    தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
    இருநிலம் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்
    சேயை யாயினும் இவணை யாயினும்
    இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ
    சிறுநனி ஒருவழிப் படர்க என் றோனே எந்தை
    ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
    உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
    அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
    இருங்கோள் ஈராப் பூட்கைக்
    கரும்பன் ஊரன் காதல் மகனே

  • தென் பவ்வத்து முத்துப் பூண்டு

    புறநானூறு

    தென் பவ்வத்து முத்துப் பூண்டு
    வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
    _____________ங்கடல் தானை
    இன்னிசைய விறல் வென்றித்
    தென் னவர் வய மறவன்
    மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
    நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய
    தேறுபெ________________த்துந்து
    தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
    துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
    நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
    வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல
    ___________த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
    அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
    இலம்படு காலை ஆயினும்
    புலம்பல்போ யின்று பூத்தஎன் கடும்பே

  • யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை

    புறநானூறு

    யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை
    அவனே பெறுக என் நாஇசை நுவறல்
    நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
    நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
    வில்லி யாதன் கிணையேம் பெரும
    குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்
    நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
    வல்லன் எந்தை பசிதீர்த்தல் எனக்
    கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    விண்தோய் தலைய குன்றம் பிற்பட
    ____________________ரவந்தனென் யானே
    தாயில் தூவாக் குழவிபோல ஆங்கு அத்
    திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
    வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
    குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே

    புறத்திணை நன்னாகனார்

  • தென் பரதவர் மிடல் சாய

    புறநானூறு

    தென் பரதவர் மிடல் சாய
    வட வடுகர் வாள் ஓட்டிய
    தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
    கடுமா கடை இய விடுபரி வடிம்பின்
    நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
    புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
    பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
    அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
    எஞ்சா மரபின் வஞ்சி பாட
    எமக்கென வகுத்த அல்ல மிகப்பல
    மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே அது கண்டு
    இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு
    அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
    இருங்குளைத் தலைமை எய்தி
    அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே

    ஊன்பொதி பசுங்குடையார்