Tag: வெண்பா

  • ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

    புறநானூறு

    ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
    குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
    வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
    வேனல் வரி அணில் வாலத்து அன்ன
    கான ஊகின் கழன்றுகு முதுவீ
    அரியல் வான்குழல் சுரியல் தங்க
    நீரும் புல்லும் ஈயாது உமணர்
    யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
    பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
    வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
    எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்
    பண் கொளற்கு அருமை நோக்கி
    நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே

  • களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி

    புறநானூறு

    களிறுபொரக் கலங்கு கழன்முள் வேலி
    அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
    ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
    நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது
    விருந்து எதிர் பெறுகதில் யானே என்ஐயும்
    ஒ_________________________ வேந்தனொடு
    நாடுதரு விழுப்பகை எய்துக எனவே

    அள்ளூர் நன் முல்லையார்

  • வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

    புறநானூறு

    வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
    உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
    எல்லி வந்து நில்லாது புக்குச்
    சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
    ஏணியும் சீப்பும் மாற்றி
    மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

    மதுரை வேளாசான்

  • கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி

    புறநானூறு

    கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
    நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
    வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
    பண்ணற்கு விரைதி நீயேநெருநை
    எம்முன் தப்பியோன் தம்பியடு ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் வன்மான்
    கடவும் என்ப பெரிதே அது கேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
    இரண்டா காது அவன் கூறியது எனவே

    அரிசில்கிழார்

  • நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ

    புறநானூறு

    நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
    உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
    எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
    வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே நெருநை
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர்
    கயந்தலை மடப்பிடி புலம்ப
    இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

    எருமை வெளியனார்

  • வெடிவேய் கொள்வது போல ஓடித்

    புறநானூறு

    வெடிவேய் கொள்வது போல ஓடித்
    தாவுபு உகளும் மாவே பூவே
    விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
    நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
    ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
    கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
    நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
    நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
    வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்ணிவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறையாற் றாவே

    காமக் கண்ணியார்

  • இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்

    புறநானூறு

    இரும்புமுகம் சிதைய நூறி ஒன்னார்
    இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே
    நல்லரா உறையும் புற்றம் போலவும்
    கொல்ஏறு திரிதரு மன்றம் போலவும்
    மாற்றருந் துப்பின் மாற்றோர் பாசறை
    உளன் என வெரூஉம் ஓர்ஒளி
    வலன்உயர் நெடுவேல் என்னைகண் ணதுவே

    மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்

  • கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க

    புறநானூறு

    கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
    மயில்அம் சாயல் மாஅ யோளடு
    பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
    மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
    குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
    புன்புறப் பெடையடு வதியும்
    யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

    பெருங்குன்றூர் கிழார்

  • அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்

    புறநானூறு

    அத்தம் நண்ணிய நாடுகெழு பெருவிறல்
    கைப்பொருள் யாதொன்றும் இலனே நச்சிக்
    காணிய சென்ற இரவன் மாக்கள்
    களிறொடு நெடுந்தேர் வேண்டினும் கடவ
    உப்பொய் சாகாட்டு உமணர் காட்ட
    கழிமுரி குன்றத்து அற்றே
    எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே

    மாங்குடி மருதனார்

  • மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

    புறநானூறு

    மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்
    கேட்பின் அல்லது காண்பறி யலையே
    காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
    விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்
    கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
    மாரி யன்ன வண்மைத்
    தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்