Tag: வெண்பா

  • இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்

    புறநானூறு

    இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
    இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
    நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
    எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
    அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
    உறைப்புழி ஓலை போல
    மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே

    ஔவையார்

  • ஈரச் செவ்வி உதவின ஆயினும்

    புறநானூறு

    ஈரச் செவ்வி உதவின ஆயினும்
    பல்எருத் துள்ளும் நல் எருது நோக்கி
    வீறுவீறு ஆயும் உழவன் போலப்
    பீடுபெறு தொல்குடிப் பாடுபல தங்கிய
    மூதி லாளர் உள்ளும் காதலின்
    தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
    இவற்கு ஈக என்னும் அதுவும்அன் றிசினே
    கேட்டியோ வாழி பாண பாசறைப்
    பூக்கோள் இன்று என்று அறையும்
    மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே

    கழாத்தலையார்

  • மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

    புறநானூறு

    மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்
    அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து
    வென்றதன் பச்சை சீவாது போர்த்த
    திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
    ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
    நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
    அருகுகை மன்ற
    குருதியடு துயல்வரும் மார்பின்
    முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே

    கழாத்தலையார்

  • துடி எறியும் புலைய

    புறநானூறு

    துடி எறியும் புலைய
    எறிகோல் கொள்ளும் இழிசின
    கால மாரியின் அம்பு தைப்பினும்
    வயல் கெண்டையின் வேல் பிறழினும்
    பொலம்புனை ஓடை அண்ணல் யானை
    இலங்குவாள் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
    ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
    நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
    நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
    தண்ணடை பெறுதல் யாவது படினே
    மாசில் மகளிர் மன்றல் நன்றும்
    உயர்நிலை உலகத்து நுகர்ப அதனால்
    வம்ப வேந்தன் தானை
    இம்பர் நின்றும் காண்டிரோ வரவே

    சாத்தந்தையார்

  • வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்

    புறநானூறு

    வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
    தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
    பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
    கால்வழி கட்டிலிற் கிடப்பித்
    தூவெள் அறுவை போர்ப்பித் திலதே

    ஔவையார்

  • பாசறை யீரே பாசறை யீரே

    புறநானூறு

    பாசறை யீரே பாசறை யீரே
    துடியன் கையது வேலே அடிபுணர்
    வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்பொருள்
    பாணன் கையது தோலே காண்வரக்
    கடுந்தெற்று மூடையின்
    வாடிய மாலை மலைந்த சென்னியன்
    வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
    நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
    மூரி வேண்டோள்
    சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ
    மாறுசெறு நெடுவேல் மார்புஉளம் போக
    நிணம்பொதி கழலொடு நிலம் சேர்ந் தனனெ
    அதுகண்டு பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
    இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
    அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
    இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
    கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே

    அரிசில் கிழார்

  • வருகதில் வல்லே வருகதில் வல்என

    புறநானூறு

    வருகதில் வல்லே வருகதில் வல்என
    வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
    நூலரி மாலை சூடிக் காலின்
    தமியன் வந்த மூதி லாளன்
    அருஞ்சமம் தாங்கி முன்னின்று எறிந்த
    ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
    திரிந்த வாய்வாள் திருத்தாத்
    தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே

    ஓரம் போகியார்

  • ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி

    புறநானூறு

    ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
    வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
    பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
    மாறுகொள் முதலையடு ஊழ்மாறு பெயரும்
    அழும்பிலன் அடங்கான் தகையும் என்றும்
    வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
    மன்றுள் என்பது கெட_______னே பாங்கற்கு
    ஆர்சூழ் குவட்டின் வேல்நிறத்து இங்க
    உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
    தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
    மென்தோள் மகளிர் நன்று புரப்ப
    ________________ ண்ட பாசிலைக்
    கமழ்பூந் தும்பை நுதல் அசைத் தோனே

    அடை நெடுங் கல்வியார்

  • எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்

    புறநானூறு

    எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
    அருங்கடன் இறுத்த பெருஞ்செ யாளனை
    யாண்டுளனோவென வினவுதி ஆயின்
    வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
    அருங்கடன் இறுமார் வயவர் எறிய
    உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே
    மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
    அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய
    பலகை அல்லது களத்துஒழி யதே
    சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
    நாநவில் புலவர் வாய் உளானே

    பெருங்கடுங்கோ

  • தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ

    புறநானூறு

    தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
    வாங்குமருப்பு யாழொடு பல்இயம் கறங்கக்
    கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
    ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
    இசைமணி எறிந்து காஞ்சி பாடி
    நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
    காக்கம் வம்மோ காதலந் தோழீ
    வேந்துறு விழுமம் தாங்கிய
    பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

    அரிசில் கிழார்