Tag: புறம்

  • கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்

    புறநானூறு

    கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும்
    வெங்கால் வம்பலர் வேண்டுபுலத்து உறையவும்
    களம்மலி குப்பை காப்பில வைகவும்
    விலங்குபகைகடிந்த கலங்காச் செங்கோல்
    வையகம் புகழ்ந்த வயங்குவினை ஒள்வாள்
    பொய்யா எழினி பொருதுகளம் சேர
    ஈன்றோர் நீத்த குழவி போலத்
    தன்அமர் சுற்றம் தலைத்தலை இனையக்
    கடும்பசி கலக்கிய இடும்பைகூர் நெஞ்சமொடு
    நோய் உழந்து வைகிய உலகிலும் மிக நனி
    நீ இழந் தனையே அறனில் கூற்றம்
    வாழ்தலின் வரூஉம் வயல்வளன் அறியான்
    வீழ்குடி உழவன் உண்ணாய் ஆயின்
    நேரார் பல்லுயிர் பருகி
    ஆர்குவை மன்னோ அவன் அமர்அடு களத்தே

    அரிசில் கிழார்

  • ஆடு இயல் அழல் குட்டத்து

    புறநானூறு

    ஆடு இயல் அழல் குட்டத்து
    ஆர் இருள் அரை இரவில்
    முடப் பனையத்து வேர் முதலாக்
    கடைக் குளத்துக் கயம் காயப்
    பங்குனி உயர் அழுவத்துத்
    தலை நாள்மீன் நிலை திரிய
    நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்
    தொல் நாள்மீன் துறை படியப்
    பாசிச் செல்லாது ஊசித் துன்னாது
    அளக்கர்த் திணை விளக்காகக்
    கனைஎரி பரப்பக் கால்எதிர்பு பொங்கி
    ஒருமீன் விழுந்தன்றால் விசும்பி னானே
    அதுகண்டு யாமும்பிறரும் பல்வேறு இரவலர்
    பறைஇசை அருவி நல்நாட்டுப் பொருநன்
    நோயிலன் ஆயின் நன்றுமன் தில் லென
    அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப
    அஞ்சினம் எழுநாள் வந்தன்று இன்றே
    மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்
    திண்பிணி முரசும் கண்கிழிந்து உருளவும்
    காவல் வெண்குடை கால்பரிந்து உலறவும்
    கால்இயல் கலிமாக் கதிஇன்றி வைகவும்
    மேலோர் உலகம் எய்தினன் ஆகலின்
    ஒண்தொடி மகளிர்க்கு உறுதிணை ஆகித்
    தன்துணை ஆயம் மறந்தனன் கொல்லோ-
    பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு
    அளந்து கொடை அறியா ஈகை
    மணிவரை அன்ன மாஅ யோனே

    கூடலூர் கிழார்

  • நனிபே தையே நயனில் கூற்றம்

    புறநானூறு

    நனிபே தையே நயனில் கூற்றம்
    விரகுஇன் மையின் வித்துஅட்டு உண்டனை
    இன்னுங் காண்குவை நன்வாய் ஆகுதல்
    ஒளிறுவாள் மறவரும் களிறும் மாவும்
    குருதியும் குரூஉப்புனற் பொருகளத்து ஒழிய
    நாளும் ஆனான் கடந்துஅட்டு என்றும் நின்
    வாடுபசி அருந்திய பழிதீர் ஆற்றல்
    நின்னோர் அன்ன பொன்னியற் பெரும்பூண்
    வளவன் என்னும் வண்டுமூசு கண்ணி
    இனையோற் கொண்டனை ஆயின்
    இனியார் மற்றுநின் பசிதீர்ப் போரே

    ஆடுதுறை மாசாத்தனார்

  • செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்

    புறநானூறு

    செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்
    உற்றன்று ஆயினும் உய்வின்று மாதோ
    பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி
    இரந்தன்று ஆகல் வேண்டும் பொலந்தார்
    மண்டமர் கடக்கும் தானைத்
    திண்தேர் வளவற் கொண்ட கூற்றே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய

    புறநானூறு

    தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய
    இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
    கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
    நிலமார் வையத்து வலமுறை வளைஇ
    வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடு
    ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
    சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்
    இன்னிசைப் பறையடு வென்றி நுவலத்
    தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
    ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
    ஞாலங் காவலர் கடைத்தலைக்
    காலைத் தோன்றினும் நோகோ யானே

    ஆலத்தூர் கிழார்

  • அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்

    புறநானூறு

    அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்
    துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
    இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
    அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து
    முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
    பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
    பருதி உருவின் பல்படைப் புரிசை
    எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
    வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
    அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்
    இறந்தோன் தானே அளித்துஇவ் வுலகம்
    அருவி மாறி அஞ்சுவரக் கருகிப்
    பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்
    பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
    பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
    கொய்துகட்டு அழித்த வேங்கையின்
    மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே

    கருங்குழல் ஆதனார்

  • பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்

    புறநானூறு

    பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்
    தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
    நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
    இடங் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
    இன்னுயிர் விரும்பும் கிழமைத்
    தொன்னட் புடையார் தம்உழைச் செலினே

    பொத்தியார்

  • கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

    புறநானூறு

    கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
    செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
    வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடுமுன் னினனே கட்கா முறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென் றனவே
    தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே
    ஆள்இல் வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே
    வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
    எந்தை ஆகுல அதற்படல் அறியேன்
    அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
    என்ஆ குவர்கொல் என் துன்னி யோரே
    மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
    வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
    அவல மறுசுழி மறுகலின்
    தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

    பெருஞ்சித்திரனார்

  • இளையரும் முதியரும் வேறுபுலம் படர

    புறநானூறு

    இளையரும் முதியரும் வேறுபுலம் படர
    எதிர்ப்ப எழாஅய் மார்பமண் புல்ல
    இடைச்சுரத்து இறுத்த மள்ள விளர்த்த
    வளையில் வறுங்கை ஓச்சிக் கிளையுள்
    இன்னன் ஆயினன் இளையோன் என்று
    நின்னுரை செல்லும் ஆயின் மற்று
    முன்ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப்
    புள்ளார் யாணர்த் தற்றே என் மகன்
    வளனும் செம்மலும் எமக்கு என நாளும்
    ஆனாது புகழும் அன்னை
    யாங்குஆ குவள்கொல் அளியள் தானே

    கயமனார்

  • நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்

    புறநானூறு

    நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்
    பாடி நின்ற பசிநாட் கண்ணே
    கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
    பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
    வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
    நச்சி இருந்த நசைபழுது ஆக
    அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
    அளியர் தாமே ஆர்க என்னா
    அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
    ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
    வாழைப் பூவின் வளைமுறி சிதற
    முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
    ஆங்கு அது நோயின்று ஆக ஓங்குவரைப்
    புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
    எலிபார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைக்
    கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
    நனியுடைப் பரிசில் தருகம்
    எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே

    பெருஞ்சித்திரனார்