Author: Pulan

  • உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்

    புறநானூறு

    உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்று உள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
    ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடை யோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பால் உள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே

    ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்

  • மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர

    புறநானூறு

    மதிநிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர
    வகைமாண் நல்லில்
    பொறிமலர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப
    பொய்கைப் பூமுகை மலரப் பாணர்
    கைவல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க
    இரவுப் புறம் பெற்ற ஏம வைகறைப்
    பரிசிலர் வரையா விரைசெய் பந்தர்
    வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்
    நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப்
    புலியினம் மடிந்த கல்லளை போலத்
    துன்னல் போகிய பெரும்பெயர் மூதூர்
    மதியத்து அன்னஎன் அரிக்குரல் தடாரி
    இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து
    உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்
    தள்ளா நிலையை யாகியர் எமக்கு என
    என்வரவு அறீஇச்
    சிறி திற்குப் பெரிது உவந்து
    விரும்பிய முகத்த னாகி என் அரைத்
    துரும்புபடு சிதாஅர் நீக்கித் தன் அரைப்
    புகைவிரிந் தன்ன பொங்குதுகில் உடீஇ
    அழல்கான் றன்ன அரும்பெறல் மண்டை
    நிழல்காண் தேறல் நிறைய வாக்கி
    யான்உண அருளல் அன்றியும் தான்உண்
    மண்டைய கண்ட மான்வறைக் கருனை
    கொக்குஉகிர் நிமிரல் ஒக்கல் ஆர
    வரையுறழ் மார்பின் வையகம் விளக்கும்
    விரவுமணி ஒளிர்வரும் அரவுஉறழ் ஆரமொடு
    புரையோன் மேனிப் பூந்துகில் கலிங்கம்
    உரைசெல அருளி யோனே
    பறைஇசை அருவிப் பாயல் கோவே

    திருத்தாமனார்

  • அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

    புறநானூறு

    அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
    காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
    ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
    மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
    செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
    பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன
    மெய்களைந்து இன்னொடு விரைஇ
    மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
    அழிகளிற் படுநர் களியட வைகின்
    பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
    கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
    செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
    நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்
    கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
    பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
    ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
    அறவர் அறவன் மறவர் மறவன்
    மள்ளர் மள்ளன்தொல்லோர் மருகன்
    இசையிற் கொண்டான் நசையமுது உண்க என
    மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
    வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
    விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
    அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்
    கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
    கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
    பகடே அத்தை யான் வேண்டிவந் தது என
    ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
    ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
    ஊர்தியடு நல்கி யோனே சீர்கொள
    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே

    ஐயூற் முடவனார்

  • மாசு விசும்பின் வெண் திங்கள்

    புறநானூறு

    மாசு விசும்பின் வெண் திங்கள்
    மூ வைந்தான் முறை முற்றக்
    கடல் நடுவண் கண்டன்ன என்
    இயம் இசையா மரபு ஏத்திக்
    கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
    பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
    உலகு காக்கும் உயர் கொள்கை
    கேட்டோன் எந்தை என் தெண்கிணைக் குரலே
    கேட்டற் கொண்டும் வேட்கை தண்டாது
    தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
    மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
    _____________________________லவான
    கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
    நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
    போ தறியேன் பதிப் பழகவும்
    தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
    பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
    மறவர் மலிந்ததன் ________________
    கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
    இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
    தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
    துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
    உறைவின் யாணர் நாடுகிழ வோனே

    கோவூர் கிழார்

  • சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி

    புறநானூறு

    சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி
    தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
    வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
    பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
    கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட
    மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
    நீரினும் இனிய சாயல்
    பாரி வேள்பால் பாடினை செலினே

    கபிலர்

  • வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்

    புறநானூறு

    வெள்ளியும் இருவிசும்பு ஏர்தரும் புள்ளும்
    உயர்சினைக் குடம்பைக் குரல்தோற் றினவே
    பொய்கையும் போடுகண் விழித்தன பையச்
    சுடரும் சுருங்கின்று ஒளியே பாடெழுந்து
    இரங்குகுரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப
    இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி
    எஃகுஇருள் அகற்றும் ஏமப் பாசறை
    வைகறை அரவம் கேளியர் பலகோள்
    செய்தார் மார்ப எழுமதி துயில் எனத்
    தெண்கண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றி
    நெடுங்கடைத் தோன்றி யேனே அது நயந்து
    உள்ளி வந்த பரிசிலன் இவன் என
    நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ்சூடு
    மணிக்கலன் நிறைந்த மணநாறு தேறல்
    பாம்புரித் தன்ன வான்பூங் கலிங்கமொடு
    மாரி யன்ன வண்மையின் சொரிந்து
    வேனில் அன்ன என் வெப்பு நீங்க
    அருங்கலம் நல்கி யோனே என்றும்
    செறுவிற் பூத்த சேயிதழ்த் தாமரை
    அறுதொழில் அந்தணர் அறம்புரிந்து எடுத்த
    தீயடு விளங்கும் நாடன் வாய்வாள்
    வலம்படு தீவிற் பொலம்பூண் வளவன்
    எறிதிரைப் பெருங்கடல் இறுதிக்கண் செலினும்
    தெறுகதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும்
    என்னென்று அஞ்சலம் யாமே வென்வெல்
    அருஞ்சமம் கடக்கும் ஆற்றல் அவன்
    திருந்துகழல் நோன்தாள் தண்நிழ லேமே

    எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்