Author: Pulan

  • நீர் நுங்கின் கண் வலிப்பக்

    புறநானூறு

    நீர் நுங்கின் கண் வலிப்பக்
    கான வேம்பின் காய் திரங்கக்
    கயங் களியும் கோடை ஆயினும்
    ஏலா வெண்பொன் போகுறு காலை
    எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்
    என்றுஈத் தனனே இசைசால் நெடுந்தகை
    இன்றுசென்று எய்தும் வழியனும் அல்லன்
    செலினே காணா வழியனும் அல்லன்
    புன்தலை மடப்பிடி இனையக் கன்றுதந்து
    குன்றக நல்லூர் மன்றத்துப் பிணிக்கும்
    கல்லிழி அருவி வேங்கடங் கிழவோன்
    செல்வுழி எழாஅ நல்லேர் முதியன்
    ஆத னுங்கன் போல நீயும்
    பசித்த ஒக்கல் பழங்கண் வீட
    வீறுசால் நன்கலம் நல்குமதி பெரும
    ஐதுஅகல் அல்குல் மகளிர்
    நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே

    கள்ளில் ஆத்திரையனார்

  • வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்

    புறநானூறு

    வெள்ளி தென்புலத்து உறைய விளைவயல்
    பள்ளம் வாடிய பயன்இல் காலை
    இரும்பறைக் கிணைமகன் சென்றவன் பெரும்பெயர்
    சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித்
    தன்நிலை அறியுநன் ஆக அந்நிலை
    இடுக்கண் இரியல் போக உடைய
    கொடுத்தோன் எந்தை கொடைமேந் தோன்றல்
    நுண்ணூல் தடக்கையின் நாமருப் பாக
    வெல்லும் வாய்மொழிப் புல்லுடை விளைநிலம்
    பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ அவன்
    வினைப்பகடு ஏற்ற மேழிக் கிணைத்தொடா
    நாடொறும் பாடேன் ஆயின் ஆனா
    மணிகிளர் முன்றில் தென்னவன் மருகன்
    பிணிமுரசு இரங்கும் பீடுகெழு தானை
    அண்ணல் யானை வழுதி
    கண்மா றிலியர்என் பெருங்கிளைப் புரவே

    மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

  • வள் உகிர வயல் ஆமை

    புறநானூறு

    வள் உகிர வயல் ஆமை
    வெள் அகடு கண் டன்ன
    வீங்கு விசிப் புதுப் போர்வைத்
    தெண்கண் மாக்கிணை இயக்கி என்றும்
    மாறு கொண்டோர் மதில் இடறி
    நீறு ஆடிய நறுங் கவுள
    பூம்பொறிப் பணை எருத்தின
    வேறு வேறு பரந்து இயங்கி
    வேந்துடை மிளை அயல் பரக்கும்
    ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்
    திருந்து தொழிற் பல பகடு
    பகைப்புல மன்னர் பணிதிறை தந்து நின்
    நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி
    மிகப்பொலியர் தன் சேவடியத்தை என்று
    யாஅன் இசைப்பின் நனிநன்று எனாப்
    பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்
    மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்
    திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
    வென் றிரங்கும் விறன் முரசினோன்
    என் சிறுமையின் இழித்து நோக்கான்
    தன் பெருமையின் தகவு நோக்கிக்
    குன்று உறழ்ந்த களி றென்கோ
    கொய் யுளைய மா என்கோ
    மன்று நிறையும் நிரை என்கோ
    மனைக் களமரொடு களம் என்கோ
    ஆங்கவை கனவுஎன மருள வல்லே நனவின்
    நல்கி யோனே நகைசால் தோன்றல்
    ஊழி வாழி பூழியர் பெருமகன்
    பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
    செல்வக் கடுங்கோ வாழி யாதன்
    ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து இவன்
    விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
    புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
    கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
    பல்லூர் சுற்றிய கழனி
    எல்லாம் விளையும் நெல்லினும் பலவே

    குண்டுகட் பாலியாதனார்

  • நெடு நீர நிறை கயத்துப்

    புறநானூறு

    நெடு நீர நிறை கயத்துப்
    படு மாரித் துளி போல
    நெய் துள்ளிய வறை முகக்கவும்
    சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்
    ஊன் கொண்ட வெண் மண்டை
    ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
    வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
    செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
    ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
    வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
    பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின
    புறவே புல்லருந்து பல்லா யத்தான்
    வில்இருந்த வெங்குறும் பின்று
    கடலே கால்தந்த கலம் எண்ணுவோர்
    கானற் புன்னைச் சினைநிலக் குந்து
    கழியே சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
    பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து
    அன்னநன் நாட்டுப் பொருநம் யாமே
    பொரா அப் பொருந ரேம்
    குணதிசை நின்று குடமுதற் செலினும்
    வடதிசை நின்று தென்வயிற் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க வெள்ளி யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே

    கோவூர் கிழார்

  • வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப

    புறநானூறு

    வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
    புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
    தன்கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
    அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
    வறன்யான் நீங்கல் வேண்டி என் அரை
    நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
    வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
    காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
    நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
    நல்அரு வந்தை வாழியர் புல்லிய
    வேங்கட விறல்வரைப் பட்ட
    ஓங்கல் வானத்து உறையினும் பலவே

    கல்லாடனார்

  • மென் பாலான் உடன் அணைஇ

    புறநானூறு

    மென் பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
    அறைக் கரும்பின் பூ அருந்தும்
    வன் பாலான் கருங்கால் வரகின்
    _____________________________________
    அங்கண் குறுமுயல் வெருவ அயல
    கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து
    விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து
    ____________கிணையேம் பெரும
    நெல் என்னாம் பொன் என்னாம்
    கனற்றக் கொண்ட நறவு என்னும்
    ____________மனை என்னா அவை பலவும்
    யான் தண்டவும் தான் தண்டான்
    நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
    மண் நாணப் புகழ் வேட்டு
    நீர் நாண நெய் வழங்கிப்
    புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
    அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
    யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
    உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
    வந்த வைகல் அல்லது
    சென்ற எல்லைச் செலவு அறி யேனே

    புறத்திணை நன்னாகனார்

  • ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து

    புறநானூறு

    ஒண்பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து
    தண்பனி உறைக்கும் புலரா ஞாங்கர்
    நுண்கோல் சிறுகிணை சிலம்ப ஒற்றி
    நெடுங்கடை நின்று பகடுபல வாழ்த்தித்
    தன்புகழ் ஏத்தினெ னாக ஊன்புலந்து
    அருங்கடி வியன்நகர்க் குறுகல் வேண்டிக்
    கூம்புவிடு மென்பிணி அவிழ்த்த ஆம்பல்
    தேம்பாய் உள்ள தம்கமழ் மடர் உளப்
    பாம்பு உரி அன்ன வடிவின காம்பின்
    கழைபடு சொலியின் இழை அணி வாரா
    ஒண்பூங் கலிங்கம் உடீ இ நுண்பூண்
    வசிந்துவாங்கு நுசுப்பின் அவ்வாங்கு உந்திக்
    கற்புடை மடந்தை தற்புறம் புல்ல
    எற் பெயர்ந்த நோக்கி _______________
    __________________________ கற்கொண்டு
    அழித்துப் பிறந்ததென னாகி அவ்வழிப்
    பிறர் பாடுபுகழ் பாடிப் படர்பு அறி யேனே
    குறுமுலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி
    நரைமுக வூகமொடு உகளும் சென____
    _______________கன்றுபல கெழீ இய
    கான்கெழு நாடன் நெடுந்தேர் அவியன் என
    ஒருவனை உடையேன் மன்னே யானே
    அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே

    மாறோக்கத்து நப்பசலையார்

  • பனி பழுநிய பல் யாமத்துப்

    புறநானூறு

    பனி பழுநிய பல் யாமத்துப்
    பாறு தலை மயிர் நனைய
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
    இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
    அவி உணவினோர் புறங் காப்ப
    அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
    அதற் கொண்டு வரல் ஏத்திக்
    கரவு இல்லாக் கவிவண் கையான்
    வாழ்க எனப் பெயர் பெற்றோர்
    பிறர்க்கு உவமம் பிறர் இல் என
    அது நினைத்து மதி மழுகி
    அங்கு நின்ற எற் காணூஉச்
    சேய் நாட்டுச் செல் கிணைஞனை
    நீபுரவலை எமக்கு என்ன
    மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
    கடல் பயந்த கதிர் முத்தமும்
    வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
    நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
    __________ பொற்கோட்டு யானையர்
    கவர் பரிக் கச்சை நன்மான்
    வடி மணி வாங்கு உருள
    __________ நல்தேர்க் குழுவினர்
    கத ழிசை வன்க ணினர்
    வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
    கடல் ஒலி கொண்ட தானை
    அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே

    உலோச்சனார்

  • விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்

    புறநானூறு

    விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
    பசுங்கதிர் மழுகிய சிவந்துவாங்கு அந்தி
    சிறுநனி பிறந்த பின்றைச் செறிபிணிச்
    சிதாஅர் வள்பின்என் தடாரி தழீஇப்
    பாணர் ஆரும் அளவை யான்தன்
    யாணர் நல்மனைக் கூட்டு முதல் நின்றனென்
    இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக்
    குணக்கு எழு திங்கள் கனைஇருள் அகற்றப்
    பண்டுஅறி வாரா உருவோடு என் அரைத்
    தொன்றுபடு துளையடு பருஇழை போகி
    நைந்துகரை பறைந்தஎன் உடையும் நோக்கி
    விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை
    நின்ற முரற்கை நீக்கி நன்றும்
    அரவுவெகுண் டன்ன தேறலொடு சூடுதருபு
    நிரயத் தன்னஎன் வறன்களைந் தன்றே
    இரவி னானே ஈத்தோன் எந்தை
    அற்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும்
    இரப்பச் சிந்தியேன் நிரப்படு புணையின்
    உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்
    நிறைக்குளப் புதவின் மகிழ்ந்தனெ னாகி
    ஒருநாள் இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை
    ஞாங்கர் நெடுமொழி பயிற்றித்
    தோன்றல் செல்லாது என் சிறுகிணைக் குரலே

    புறத்திணை நன்னாகனார்

  • அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி

    புறநானூறு

    அலங்குகதிர் சுமத்த கலங்கற் சூழி
    நிலைதளர்வு தொலைந்த ஒல்குநிலைப் பல்காற்
    பொதியில் ஒருசிறை பள்ளி யாக
    முழாவரைப் போந்தை அரவாய் மாமடல்
    நாரும் போழும் கிணையோடு சுருக்கி
    ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ
    ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
    புரவுஎதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் எனப்
    புரசம் தூங்கும் அறாஅ யாணர்
    வரையணி படப்பை நன்னாட்டுப் பொருந
    பொய்யா ஈகைக் கழல்தொடி ஆஅய்
    யாவரும் இன்மையின் கிணைப்பத் தாவது
    பெருமழை கடல்பரந் தாஅங்கு யானும்
    ஒருநின் உள்ளி வந்தனென் அதனால்
    புலவர் புக்கில் ஆகி நிலவரை
    நிலீ இயர் அத்தை நீயே ஒன்றே
    நின்னின்று வறுவிது ஆகிய உலகத்து
    நிலவன் மாரோ புரவலர் துன்னிப்
    பெரிய ஓதினும் சிறிய உணராப்
    பீடின்று பெருகிய திருவின்
    பாடில் மன்னரைப் பாடன்மார் எமரே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்