Author: Pulan

  • பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்

    புறநானூறு

    பாறுபடப் பறைந்த பன்மாறு மருங்கின்
    வேறுபடு குரல வெவ்வாய்க் கூகையடு
    பிணந்தின் குறுநரி நிணம்திகழ் பல்ல
    பேஎய் மகளிர் பிணம்தழூஉப் பற்றி
    விளர்ஊன் தின்ற வெம்புலால் மெய்யர்
    களரி மருங்கில் கால்பெயர்த் தாடி
    ஈம விளக்கின் வெருவரப் பேரும்
    காடுமுன் னினரே நாடுகொண் டோரும்
    நினக்கும் வருதல் வைகல் அற்றே
    வசையும் நிற்கும் இசையும் நிற்கும்
    அதனால் வசைநீக்கி இசைவேண்டியும்
    நசை வேண்டாது நன்று மொழிந்தும்
    நிலவுக் கோட்டுப் பலகளிற் றோடு
    பொலம் படைய மா மயங்கிட
    இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
    கொள் என விடுவை யாயின் வெள்ளென
    ஆண்டுநீ பெயர்ந்த பின்னும்
    ஈண்டுநீடு விளங்கும் நீ எய்திய புகழே

    கரவட்டனார்

  • பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

    புறநானூறு

    பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
    ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கைவிட் டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

    வான்மீகியார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்

    புறநானூறு

    மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும்
    நீஇர் இன்மையின் கன்றுமேய்ந்து உகளும்
    ஊரது நிலைமையும் இதுவே
    _____________________________

  • அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா

    புறநானூறு

    அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
    நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை உகைத்த வாளை
    புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
    ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
    வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே

    பரணர்

  • வள் உகிர வயல் ஆமை

    புறநானூறு

    வள் உகிர வயல் ஆமை
    வெள் அகடு கண் டன்ன
    வீங்கு விசிப் புதுப் போர்வைத்
    தெண்கண் மாக்கிணை இயக்கி என்றும்
    மாறு கொண்டோர் மதில் இடறி
    நீறு ஆடிய நறுங் கவுள
    பூம்பொறிப் பணை எருத்தின
    வேறு வேறு பரந்து இயங்கி
    வேந்துடை மிளை அயல் பரக்கும்
    ஏந்து கோட்டு இரும்பிணர்த் தடக்கைத்
    திருந்து தொழிற் பல பகடு
    பகைப்புல மன்னர் பணிதிறை தந்து நின்
    நசைப்புல வாணர் நல்குரவு அகற்றி
    மிகப்பொலியர் தன் சேவடியத்தை என்று
    யாஅன் இசைப்பின் நனிநன்று எனாப்
    பலபிற வாழ்த்த இருந்தோர் தங்கோன்
    மருவ இன்நகர் அகன் கடைத்தலைத்
    திருந்துகழல் சேவடி குறுகல் வேண்டி
    வென் றிரங்கும் விறன் முரசினோன்
    என் சிறுமையின் இழித்து நோக்கான்
    தன் பெருமையின் தகவு நோக்கிக்
    குன்று உறழ்ந்த களி றென்கோ
    கொய் யுளைய மா என்கோ
    மன்று நிறையும் நிரை என்கோ
    மனைக் களமரொடு களம் என்கோ
    ஆங்கவை கனவுஎன மருள வல்லே நனவின்
    நல்கி யோனே நகைசால் தோன்றல்
    ஊழி வாழி பூழியர் பெருமகன்
    பிணர் மருப்பு யானைச் செருமிகு நோன்தாள்
    செல்வக் கடுங்கோ வாழி யாதன்
    ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணிந்து இவன்
    விடுவர் மாதோ நெடிதோ நில்லாப்
    புல்லிளை வஞ்சிப் புறமதில் அலைக்கும்
    கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்
    பல்லூர் சுற்றிய கழனி
    எல்லாம் விளையும் நெல்லினும் பலவே

    குண்டுகட் பாலியாதனார்

  • நெடு நீர நிறை கயத்துப்

    புறநானூறு

    நெடு நீர நிறை கயத்துப்
    படு மாரித் துளி போல
    நெய் துள்ளிய வறை முகக்கவும்
    சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்
    ஊன் கொண்ட வெண் மண்டை
    ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்
    வெய்து உண்ட வியர்ப்பு அல்லது
    செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
    ஈத்தோன் எந்தை இசைதனது ஆக
    வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்
    பாத்திப் பன்மலர்ப் பூத்த துப்பின
    புறவே புல்லருந்து பல்லா யத்தான்
    வில்இருந்த வெங்குறும் பின்று
    கடலே கால்தந்த கலம் எண்ணுவோர்
    கானற் புன்னைச் சினைநிலக் குந்து
    கழியே சிறுவெள் உப்பின் கொள்ளை சாற்றி
    பெருங்கல் நன்னாட்டு உமண்ஒலிக் குந்து
    அன்னநன் நாட்டுப் பொருநம் யாமே
    பொரா அப் பொருந ரேம்
    குணதிசை நின்று குடமுதற் செலினும்
    வடதிசை நின்று தென்வயிற் செலினும்
    தென்திசை நின்று குறுகாது நீடினும்
    யாண்டும் நிற்க வெள்ளி யாம்
    வேண்டியது உணர்ந்தோன் தாள்வா ழியவே

    கோவூர் கிழார்

  • வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப

    புறநானூறு

    வெள்ளி தோன்றப் புள்ளுக்குரல் இயம்ப
    புலரி விடியல் பகடுபல வாழ்த்தித்
    தன்கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை
    அகன்கண் தடாரிப் பாடுகேட்டு அருளி
    வறன்யான் நீங்கல் வேண்டி என் அரை
    நிலந்தினச் சிதைந்த சிதாஅர் களைந்து
    வெளியது உடீஇ என் பசிகளைந் தோனே
    காவிரி அணையும் தாழ்நீர்ப் படப்பை
    நெல்விளை கழனி அம்பர் கிழவோன்
    நல்அரு வந்தை வாழியர் புல்லிய
    வேங்கட விறல்வரைப் பட்ட
    ஓங்கல் வானத்து உறையினும் பலவே

    கல்லாடனார்

  • மென் பாலான் உடன் அணைஇ

    புறநானூறு

    மென் பாலான் உடன் அணைஇ
    வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை
    அறைக் கரும்பின் பூ அருந்தும்
    வன் பாலான் கருங்கால் வரகின்
    _____________________________________
    அங்கண் குறுமுயல் வெருவ அயல
    கருங்கோட்டு இருப்பைப் பூஉறைக் குந்து
    விழவின் றாயினும் உழவர் மண்டை
    இருங்கெடிற்று மிசையடு பூங்கள் வைகுந்து
    ____________கிணையேம் பெரும
    நெல் என்னாம் பொன் என்னாம்
    கனற்றக் கொண்ட நறவு என்னும்
    ____________மனை என்னா அவை பலவும்
    யான் தண்டவும் தான் தண்டான்
    நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை
    மண் நாணப் புகழ் வேட்டு
    நீர் நாண நெய் வழங்கிப்
    புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை
    அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு
    யாண்டு நிற்க வெள்ளி மாண்ட
    உண்ட நன்கலம் பெய்து நுடக்கவும்
    வந்த வைகல் அல்லது
    சென்ற எல்லைச் செலவு அறி யேனே

    புறத்திணை நன்னாகனார்