Author: Pulan

  • தேஎங் கொண்ட வெண்மண் டையான்

    புறநானூறு

    தேஎங் கொண்ட வெண்மண் டையான்
    வீ_____________ கறக்குந்து
    அவல் வகுத்த பசுங் குடையான்
    புதன் முல்லைப் பூப்பறிக் குந்து
    ஆம்பல் வள்ளித் தொடிக்கை மகளிர்
    குன்றுஏறிப் புனல் பாயின்
    புறவாயால் புனல்வரை யுந்து
    ______________நொடை நறவின்
    மாவண் தித்தன் வெண்ணெல் வேலி
    உறந்தை அன்ன உரைசால் நன்கலம்
    கொடுப்பவும் கொளாஅ னெ____
    ______ர்தந்த நாகிள வேங்கையின்
    கதிர்த்துஒளி திகழும் நுண்பல் சுணங்கின்
    மாக்கண் மலர்ந்த முலையள் தன்னையும்
    சிறுகோல் உளையும் புரவி
    ________________________யமரே

    பரணர்

  • ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த

    புறநானூறு

    ஆசில் கம்மியன் மாசறப் புனைந்த
    பொலஞ்செய் பல்காசு அணிந்த அல்குல்
    ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத்
    தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித்
    தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை
    வினவல் ஆனா வெல்போர் அண்ணல்
    யார்மகள் என்போய் கூறக் கேள் இனிக்
    குன்றுகண் டன்ன நிலைப்பல் போர்பு
    நாள்கடா அழித்த நனந்தலைக் குப்பை
    வல்வில் இளையர்க்கு அல்குபதம் மாற்றாத்
    தொல்குடி மன்னன் மகளே முன்நாள்
    கூறி வந்த மாமுது வேந்தர்க்கு
    __________________________________
    ______உழக்குக் குருதி ஓட்டிக்
    கதுவாய் போகிய நுதிவாய் எஃகமொடு
    பஞ்சியும் களையாப் புண்ணர்
    அஞ்சுதகவு உடையர் இவள் தன்னை மாரே

    காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்

  • வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு

    புறநானூறு

    வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
    அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
    செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை
    எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
    அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
    ________________________________________________
    புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
    மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
    பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே
    விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
    சுணங்கணி வனமுலை அவளடு நாளை
    மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
    ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்
    நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு
    வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
    படைதொட் டனனே குருசில் ஆயிடைக்
    களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
    பெருங்கவின் இழப்பது கொல்லோ
    மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே

    பரணர்

  • அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்

    புறநானூறு

    அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
    குரலம் குன்றி கொள்ளும் இளையோள்
    மாமகள் __________________
    ________லென வினவுதி கேள் நீ
    எடுப்பவெ ________________
    ___________________ மைந்தர் தந்தை
    இரும்பனை அன்ன பெருங்கை யானை
    கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
    பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தன்னே

  • வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு

    புறநானூறு

    வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
    மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
    வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
    குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
    நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து
    தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
    கடல் ஆடிக் கயம் பாய்ந்து
    கழி நெய்தற் பூக் குறூஉந்து
    பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
    _______________________________ லத்தி
    வளர வேண்டும் அவளே என்றும்
    ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி
    முறஞ்செவி யானை வேந்தர்
    மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே

  • ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்

    புறநானூறு

    ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
    நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின்
    படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
    மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
    கொற்ற வேந்தர் தரினும் தன்தக
    வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
    பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
    உணங்குகலன் ஆழியின் தோன்றும்
    ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே

    குன்றூர் கிழார் மகனார்

  • வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

    புறநானூறு

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
    ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
    களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
    ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
    இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
    அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
    அறன்இலன் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
    தகைவளர்த்து எடுத்த நகையடு
    பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே

    பரணர்

  • அடலருந் துப்பின்

    புறநானூறு

    அடலருந் துப்பின் _______________
    _____________ குருந்தே முல்லை யென்று
    இந்நான் கல்லது பூவும் இல்லை
    கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
    சிறுகொடிக் கொள்ளே பொறிகிளர் அவரையடு
    இந்நான் கல்லது உணாவும் இல்லை
    துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
    இந்நான் கல்லது குடியும் இல்லை
    ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
    ஒளிறுஏந்து மருப்பின் களிறுஎறிந்து வீழ்ந்தெனக்
    கல்லே பரவின் அல்லது
    நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே

    மாங்குடி கிழார்

  • காகரு பழனக் கண்பின் அன்ன

    புறநானூறு

    காகரு பழனக் கண்பின் அன்ன
    தூமயிர்க் குறுந்தாள் நெடுஞ்செவிக் குறுமுயல்
    புன்றலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்
    படப்புஒடுங் கும்மே ______ பின்பு _______
    _______________னூரே மனையோள்
    பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்
    ஊணொலி அரவமொடு கைதூ வாளே
    உயர்மருப்பு யானைப் புகர்முகத்து அணிந்த
    பொலம் __________________ப்
    பரிசில் பரிசிலர்க்கு ஈய
    உரவேற் காளையும் கைதூ வானே

    மதுரைத் தமிழக் கூத்தனார்

  • நீருள் பட்ட மாரிப் பேருறை

    புறநானூறு

    நீருள் பட்ட மாரிப் பேருறை
    மொக்குள் அன்ன பொகுட்டுவிழிக் கண்ண
    கரும்பிடர்த் தலைய பெருஞ்செவிக் குறுமுயல்
    உள்ளூர்க் குறும்புதல் துள்ளுவன உகளும்
    தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின்
    உண்க என உணரா உயவிற்று ஆயினும்
    தங்கனீர் சென்மோ புலவீர் நன்றும்
    சென்றதற் கொண்டு மனையோள் விரும்பி
    வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
    இரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்
    குறித்துமாறு எதிர்ப்பை பெறாஅ மையின்
    குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து
    சிறிது புறப்பட்டன்றோ விலளே தன்னூர்
    வேட்டக் குடிதொறுங் கூட்டு ________
    __________________________ உடும்பு செய்
    பாணி நெடுந்தேர் வல்லரோடு ஊரா
    வம்பணி யானை வேந்துதலை வரினும்
    உண்பது மன்னும் அதுவே
    பரிசில் மன்னும் குருசில்கொண் டதுவே