Author: Pulan

  • போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்

    புறநானூறு

    போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்
    உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்
    ஊனுற மூழ்கி உருவிழந் தனவே
    வேலே குறும்படைந்த அரண் கடந்தவர்
    நறுங் கள்ளின் நாடு நைத்தலின்
    சுரை தழீஇய இருங் காழொடு
    மடை கலங்கி நிலைதிரிந் தனவே
    களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர்
    குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்
    பரூஉப் பிணிய தொடிகழிந் தனவே
    மாவே பரந்தொருங்கு மலைந்த மறவர்
    பொலம் பைந்தார் கெடப் பரிதலின்
    களன் உழந்து அசைஇய மறுக்குளம் பினவே
    அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப்
    பொலந் தும்பைக் கழல் பாண்டில்
    கணை பொருத துளைத்தோ லன்னே
    ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடந்தாள்
    பிணிக் கதிர் நெல்லின் செம்மல் மூதூர்
    நுமக்குஉரித்து ஆகல் வேண்டின் சென்றவற்கு
    இறுக்கல் வேண்டும் திறையே மறிப்பின்
    ஒல்வான் அல்லன் வெல்போ ரான் எனச்
    சொல்லவும் தேறீர் ஆயின் மெல்லியல்
    கழற் கனி வகுத்த துணைச் சில் ஓதிக்
    குறுந்தொடி மகளிர் தோள்விடல்
    இறும்பூது அன்று அஃது அறிந்துஆ டுமினே

    ஔவையார்

  • மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்

    புறநானூறு

    மெல்லியல் விறலி நீ நல்லிசை செவியிற்
    கேட்பின் அல்லது காண்பறி யலையே
    காண்டல் சால வேண்டினை யாயின்- மாண்ட நின்
    விரை வளர் கூந்தல் வரைவளி உளரக்
    கலவ மஞ்ஞையின் காண்வர இயலி
    மாரி யன்ன வண்மைத்
    தேர்வேள் ஆயைக் காணிய சென்மே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற

    புறநானூறு

    எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற
    சில்விளை வரகின் புல்லென் குப்பை
    தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
    பசித்த பாணர் உண்டு கடை தப்பலின்
    ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்
    சிறுபுல் லாளர் முகத்தவை கூறி
    வரகுடன் இரக்கும் நெடுந்தகை
    அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே

  • ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்

    புறநானூறு

    ஊர்முது வேலிப் பார்நடை வெருகின்
    இருட்பகை வெரீஇய நாகுஇளம் பேடை
    உயிர்நடுக் குற்றுப் புலாவிட் டரற்றச்
    சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
    பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்துக்
    கலிர்ப்பூ நெற்றிச் சேவலின் தணியும்
    அருமிளை இருக்கை யதுவே மனைவியும்
    வேட்டச் சிறா அர் சேட்புலம் படராது
    படமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
    விழுக்குநிணம் பெய்த தயிர்க்கண் மிதவை
    யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு
    வருவிருந்து அயரும் விருப்பினள் கிழவனும்
    அருஞ்சமம் ததையத் தாக்கிப் பெருஞ்சமத்து
    அண்ணல் யானை அணிந்த
    பொன்செய் ஓடைப் பெரும்பரி சிலனே

    தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்

  • களிறுநீ றாடிய விடுநில மருங்கின்

    புறநானூறு

    களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
    வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்
    குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்
    செறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
    முறையன் உண்ணும் நிறையா வாழ்க்கை
    முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
    உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
    சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
    கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
    மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து
    அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
    கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
    அருமிளை இருக்கை யதுவே வென்வேல்ஊரே

    உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

  • வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்

    புறநானூறு

    வெருக்கு விடையன்ன வெருள்நோக்குக் கயந்தலைப்
    புள்ளூன் தின்ற புலவுநாறு கயவாய்
    வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
    சிறியிலை உடையின் சுரையுடை வால்முள்
    ஊக நுண்கோற் செறித்த அம்பின்
    வலாஅர் வல்வில் குலாவரக் கோலிப்
    பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
    புன்புலம் தழீஇய அங்குடிச் சீறூர்க்
    குமிழ்உண் வெள்ளைப் பகுவாய் பெயர்த்த
    வெண்வாழ் தாய வண்காற் பந்தர்
    இடையன் பொத்திய சிறுதீ விளக்கத்துப்
    பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை
    வலம்படு தானை வேந்தற்கு
    உலந்துழி உலக்கும் நெஞ்சறி துணையே

    ஆலத்தூர் கிழார்

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • பூவற் படுவிற் கூவல் தோண்டிய

    புறநானூறு

    பூவற் படுவிற் கூவல் தோண்டிய
    செங்கண் சின்னீர் பெய்த சீறில்
    முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
    யாம் க·டு உண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
    புறவும் இதலும் அறவும் உண்கெனப்
    பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
    முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
    ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
    புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
    சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

    ஆலங்குடி வங்கனார்

  • கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க

    புறநானூறு

    கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
    மயில்அம் சாயல் மாஅ யோளடு
    பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
    மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
    குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
    புன்புறப் பெடையடு வதியும்
    யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

    பெருங்குன்றூர் கிழார்