Author: Pulan

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்

  • வெடிவேய் கொள்வது போல ஓடித்

    புறநானூறு

    வெடிவேய் கொள்வது போல ஓடித்
    தாவுபு உகளும் மாவே பூவே
    விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
    நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
    ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
    கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
    நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
    நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
    வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்ணிவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறையாற் றாவே

    காமக் கண்ணியார்

  • வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

    புறநானூறு

    வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
    உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
    எல்லி வந்து நில்லாது புக்குச்
    சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
    ஏணியும் சீப்பும் மாற்றி
    மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

    மதுரை வேளாசான்

  • கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி

    புறநானூறு

    கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
    நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
    வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
    பண்ணற்கு விரைதி நீயேநெருநை
    எம்முன் தப்பியோன் தம்பியடு ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் வன்மான்
    கடவும் என்ப பெரிதே அது கேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
    இரண்டா காது அவன் கூறியது எனவே

    அரிசில்கிழார்

  • நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ

    புறநானூறு

    நிலம்பிறக் கிடுவது போலக் குளம்பு குடையூஉ
    உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
    எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
    வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
    ஆட்டிக் காணிய வருமே நெருநை
    உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
    கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர்
    கயந்தலை மடப்பிடி புலம்ப
    இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே

    எருமை வெளியனார்

  • கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க

    புறநானூறு

    கொய்யடகு வாடத் தருவிறகு உணங்க
    மயில்அம் சாயல் மாஅ யோளடு
    பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே
    மனைஉறை குரீஇக் கறையணற் சேவல்
    பாணர் நரம்பின் சுகிரொடு வயமான்
    குரல்செய் பீலியின் இழைத்த குடம்பைப்
    பெருஞ்செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன்
    புன்புறப் பெடையடு வதியும்
    யாணர்த்து ஆகும் வேந்துவிழு முறினே

    பெருங்குன்றூர் கிழார்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

    புறநானூறு

    புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
    கா ____________________________க்கு
    உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
    வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
    கறையடி யானைக்கு அல்லது
    உறைகழிப் பறியாவேலோன் ஊரே