Author: Pulan

  • வெடிவேய் கொள்வது போல ஓடித்

    புறநானூறு

    வெடிவேய் கொள்வது போல ஓடித்
    தாவுபு உகளும் மாவே பூவே
    விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட
    நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
    ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க்
    கைவார் நரம்பின் பாணர்க்கு ஒக்கிய
    நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்
    நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
    வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்
    விண்ணிவர் விசும்பின் மீனும்
    தண்பெயல் உறையும் உறையாற் றாவே

    காமக் கண்ணியார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • எமக்கே கலங்கல் தருமே தானே

    புறநானூறு

    எமக்கே கலங்கல் தருமே தானே
    தேறல் உண்ணும் மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே இனியே
    நேரார் ஆரெயில் முற்றி
    வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே

  • பெருநீர் மேவல் தண்ணடை எருமை

    புறநானூறு

    பெருநீர் மேவல் தண்ணடை எருமை
    இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
    பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
    கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
    நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
    துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
    தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

  • புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்

    புறநானூறு

    புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
    சினங்கழி மூதாக் கன்றுமடுத்து ஊட்டும்
    கா ____________________________க்கு
    உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை
    வெள்வேல் ஆவம்ஆயின் ஒள் வாள்
    கறையடி யானைக்கு அல்லது
    உறைகழிப் பறியாவேலோன் ஊரே

  • உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன

    புறநானூறு

    உழுதூர் காளை ஊழ்கோடு அன்ன
    கவைமுள் கள்ளிப் பொரிஅரைப் பொருந்திப்
    புதுவரகு அரிகால் கருப்பை பார்க்கும்
    புன்தலைச் சிறாஅர் வில்லெடுத்து ஆர்ப்பின்
    பெருங்கண் குறுமுயல் கருங்கலன் உடைய
    மன்றிற் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது
    இருஞ்சுவல் வாளை பிறழும் ஆங்கண்
    தண்பணை யாளும் வேந்தர்க்குக்
    கண்படை ஈயா வேலோன் ஊரே

    ஆவூர்கிழார்

  • பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்

    புறநானூறு

    பொறிப்புறப் பூழின் போர்வல் சேவல்
    மேந்தோல் களைந்த தீங்கொள் வெள்ளெள்
    சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன்
    வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
    குடந்தைஅம் செவிய கோட்டெலி யாட்டக்
    கலிஆர் வரகின் பிறங்குபீள் ஒளிக்கும்
    வன்புல வைப்பி னதுவே_சென்று
    தின்பழம் பசீஇ ன்னோ பாண
    வாள்வடு விளங்கிய சென்னிச்
    செருவெங் குருசில் ஓம்பும் ஊரே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • பூவற் படுவிற் கூவல் தோண்டிய

    புறநானூறு

    பூவற் படுவிற் கூவல் தோண்டிய
    செங்கண் சின்னீர் பெய்த சீறில்
    முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
    யாம் க·டு உண்டென வறிது மாசின்று
    படலை முன்றிற் சிறுதினை உணங்கல்
    புறவும் இதலும் அறவும் உண்கெனப்
    பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால்
    முயல்சுட்ட வாயினும் தருகுவேம் புகுதந்து
    ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண
    கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி
    புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
    சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்
    வேந்துவிடு தொழிலொடு சென்றனன் வந்து நின்
    பாடினி மாலை யணிய
    வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே

    ஆலங்குடி வங்கனார்