Author: Pulan

  • களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

    புறநானூறு

    களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
    புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
    தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
    பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
    ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
    சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
    தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே

    ஔவையார்

  • ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    புறநானூறு

    ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
    களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

    பொன்முடியார்

  • வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

    புறநானூறு

    வயலைக் கொடியின் வாடிய மருங்கின்
    உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
    எல்லி வந்து நில்லாது புக்குச்
    சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
    ஏணியும் சீப்பும் மாற்றி
    மாண்வினை யானையும் மணிகளைந் தனவே

    மதுரை வேளாசான்

  • கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி

    புறநானூறு

    கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
    நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
    வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
    பண்ணற்கு விரைதி நீயேநெருநை
    எம்முன் தப்பியோன் தம்பியடு ஓராங்கு
    நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்
    புன்வயிறு அருத்தலும் செல்லான் வன்மான்
    கடவும் என்ப பெரிதே அது கேட்டு
    வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
    இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
    இரண்டா காது அவன் கூறியது எனவே

    அரிசில்கிழார்

  • பல் சான்றீரே பல் சான்றீரே

    புறநானூறு

    பல் சான்றீரே பல் சான்றீரே
    குமரி மகளிர் கூந்தல் புரைய
    அமரின் இட்ட அருமுள் வேலிக்
    கல்லென் பாசறைப் பல்சான் றீரே
    முரசுமுழங்கு தானைநும் அரசும் ஓம்புமின்
    ஒளிறு ஏந்து மருப்பின்நும் களிறும் போற்றுமின்
    எனைநாள் தங்கும்நும் போரே அனைநாள்
    எறியர் எறிதல் யாவணது எறிந்தோர்
    எதிர்சென்று எறிதலும் செல்லான் அதனால்
    அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே
    பலம் என்று இகழ்தல் ஓம்புமின் உதுக்காண்
    நிலன்அளப் பன்ன நில்லாக் குறுநெறி
    வண்பரிப் புரவிப் பண்புபா ராட்டி
    எல்லிடைப் படர்தந் தோனே கல்லென
    வேந்தூர் யானைக்கு அல்லது
    ஏந்துவன் போலான் தன் இலங்கிலை வேலே

    ஆவூர் மூலங்கிழார்

  • தோல்தா தோல்தா என்றி தோலொடு

    புறநானூறு

    தோல்தா தோல்தா என்றி தோலொடு
    துறுகல் மறையினும் உய்குவை போலாய்
    நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி
    அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்
    பேரூர் அட்ட கள்ளிற்கு
    ஓர் இல் கோயின் தேருமால் நின்ன

    அரிசில் கிழார்

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • எமக்கே கலங்கல் தருமே தானே

    புறநானூறு

    எமக்கே கலங்கல் தருமே தானே
    தேறல் உண்ணும் மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே இனியே
    நேரார் ஆரெயில் முற்றி
    வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே

  • பெருநீர் மேவல் தண்ணடை எருமை

    புறநானூறு

    பெருநீர் மேவல் தண்ணடை எருமை
    இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
    பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
    கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
    நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
    துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
    தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

  • ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ

    புறநானூறு

    ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ
    குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்
    வம்பலன் போலத் தோன்றும் உதுக்காண்
    வேனல் வரி அணில் வாலத்து அன்ன
    கான ஊகின் கழன்றுகு முதுவீ
    அரியல் வான்குழல் சுரியல் தங்க
    நீரும் புல்லும் ஈயாது உமணர்
    யாரும்இல் ஒருசிறை முடத்தொடு துறந்த
    வாழா வான்பகடு ஏய்ப்பத் தெறுவர்
    பேருயிர் கொள்ளும் மாதோ அதுகண்டு
    வெஞ்சின யானை வேந்தனும் இக்களத்து
    எஞ்சலின் சிறந்தது பிறிதொன்று இல் எனப்
    பண் கொளற்கு அருமை நோக்கி
    நெஞ்சற வீழ்ந்த புரைமை யோனே