Author: Pulan

  • ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது

    புறநானூறு

    ஏறுஉடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது
    இலைபுதை பெருங்காட்டுத் தலைகரந்து இருந்த
    வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்
    செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம்
    முதுகுமெய்ப் புலைத்தி போலத்
    தாவுபு தெறிக்கும் ஆன்மேல்
    புடையிலங்கு ஒள்வாள் புனைகழ லோயே

    பெரும்பூதனார்

  • வளரத் தொடினும் வெளவுபு திரிந்து

    புறநானூறு

    வளரத் தொடினும் வெளவுபு திரிந்து
    விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்
    தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள்
    உளரும் கூந்தல் நோக்கி களர
    கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்
    பசிபடு மருங்குலை கசிபு கைதொழாஅக்
    காணலென் கொல் என வினவினை வரூஉம்
    பாண கேண்மதி யாணரது நிலையே
    புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும் இரவுஎழுந்து
    எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும்
    கையுள போலும் கடிதுஅண் மையவே
    முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்
    நெடுநிரை தழீஇய மீளி யாளர்
    விடுகணை நீத்தம் துடிபுணை யாக
    வென்றி தந்து கொன்றுகோள் விடுத்து
    வையகம் புலம்ப வளைஇய பாம்பின்
    வைஎயிற்று உய்ந்த மதியின் மறவர்
    கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்
    நிரையடு வந்த உரைய னாகி
    உரிகளை அரவ மானத் தானே
    அரிதுசெல் உலகில் சென்றனன் உடம்பே
    கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்
    கம்பமொடு துளங்கிய இலக்கம் போல
    அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே
    உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே
    மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி
    இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்
    படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே

    வடமோதங்கிழார்

  • மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி

    புறநானூறு

    மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி
    போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
    காதல் நன்மரம் நீ நிழற் றிசினே
    கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
    தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி
    காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
    ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
    பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே

    மோசிசாத்தனார்

  • பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்

    புறநானூறு

    பெருங்களிற்று அடியின் தோன்றும் ஒருகண்
    இரும்பறை இரவல சேறி ஆயின்
    தொழாதனை கழிதல் ஓம்புமதி வழாது
    வண்டுமேம் படூஉம் இவ் வறநிலை யாறே
    பல்லாத் திரள்நிரை பெயர்தரப் பெயர்தந்து
    கல்லா இளையர் நீங்க நீங்கான்
    வில்லுமிழ் கடுங்கணை மூழ்கக்
    கொல்புனல் சிறையின் விலங்கியோன் கல்லே

  • நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்

    புறநானூறு

    நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்
    பாசுவல் இட்ட புன்காற் பந்தர்ப்
    புனல்தரும் இளமணல் நிறையப் பெய்ம்மின்
    ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின்நின்று
    நிரையோடு வரூஉம் என்னைக்கு
    உழையோர் தன்னினும் பெருஞ்சா யலரே

    மதுரைப் பேராலவாயர்

  • அந்தோ எந்தை அடையாப் பேரில்

    புறநானூறு

    அந்தோ எந்தை அடையாப் பேரில்
    வண்டுபடு நறவின் தண்டா மண்டையடு
    வரையாப் பெருஞ்சோற்று முரிவாய் முற்றம்
    வெற்றுயாற்று அம்பியின் எற்று அற்று ஆகக்
    கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே
    வையங் காவலர் வளம்கெழு திருநகர்
    மையல் யானை அயாவுயிர்த் தன்ன
    நெய்யுலை சொரிந்த மையூன் ஓசை
    புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
    பயந்தனை மன்னால் முன்னே இனியே
    பல்ஆ தழீஇய கல்லா வல்வில்
    உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி
    நாகுமுலை அன்ன நறும்பூங் கரந்தை
    விரகுஅறி யாளர் மரபிற் சூட்ட
    நிரைஇவண் தந்து நடுகல் ஆகிய
    வென்வேல் விடலை இன்மையின் புலம்பிக்
    கொய்ம்மழித் தலையடு கைம்மையுறக் கலங்கிய
    கழிகலம் மகடூஉப் போல
    புல்என் றனையால் பல்அணி இழந்தே

    ஆவூர் மூலங்கிழார்

  • இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்

    புறநானூறு

    இவற்குஈந்து உண்மதி கள்ளே சினப்போர்
    இனக்களிற்று யானை இயல்தேர்க் குருசில்
    நுந்தை தந்தைக்கு இவன்தந்தை தந்தை
    எடுத்துஎறி ஞாட்பின் இமையான் தச்சன்
    அடுத்துஎறி குறட்டின் நின்று மாய்ந் தனனே
    மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்
    உறைப்புழி ஓலை போல
    மறைக்குவன் பெரும நிற் குறித்துவரு வேலே

    ஔவையார்

  • வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்

    புறநானூறு

    வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
    யாம்தனக்கு உறுமறை வளாவ விலக்கி
    வாய்வாள் பற்றி நின்றனென் என்று
    சினவல் ஓம்புமின் சிறுபுல் லாளர்
    ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
    என்முறை வருக என்னான் கம்மென
    எழுதரு பெரும்படை விலக்கி
    ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே

    விரிச்சியூர் நன்னாகனார்

  • நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்

    புறநானூறு

    நிறப்புடைக்கு ஒல்கா யானை மேலோன்
    குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
    நாண்உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்
    எம்மினும் பேர்எழில் இழந்து வினை எனப்
    பிறர்மனை புகுவள் கொல்லோ
    அளியள் தானே பூவிலைப் பெண்டே

    நொச்சி நியமங்கிழார்

  • வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்

    புறநானூறு

    வெண்குடை மதியம் மேல்நிலாத் திகழ்தரக்
    கண்கூடு இறுத்த கடல்மருள் பாசறைக்
    குமரிப்படை தழீஇய கூற்றுவினை ஆடவர்
    தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
    இறையும் பெயரும் தோற்றி நுமருள்
    நாள்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு எனப்
    போர்மலைந்து ஒருசிறை நிற்ப யாவரும்
    அரவுஉமிழ் மணியின் குறுகார்
    நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே

    பெருந்தலைச் சாத்தனார்