Author: Pulan

  • கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்

    புறநானூறு

    கதிர்மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக்
    கணைக்கோட்டு வாளை மீநீர்ப் பிறழ
    எரிப்பூம் பழனம் நெரித்துஉடன் வலைஞர்
    அரிக்குரல் தடாரியின் யாமை மிளிரச்
    பனைநுகும்பு அன்ன சினைமுதிர் வராலொடு
    உறழ்வேல் அன்ன ஒண்கயல் முகக்கும்
    அகல்நாட்டு அண்ணல் புகாவே நெருநைப்
    பகல்இடம் கண்ணிப் பலரொடும் கூடி
    ஒருவழிப் பட்டன்று மன்னே இன்றே
    அடங்கிய கற்பின் ஆய்நுதல் மடந்தை
    உயர்நிலை உலகம் அவன்புக வரி
    நீறாடு சுளகின் சீறிடம் நீக்கி
    அழுதல் ஆனாக் கண்ணள்
    மெழுகு ஆப்பிகண் கலுழ்நீ ரானே

    தும்பிசேர் கீரனார்

  • பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா

    புறநானூறு

    பாணர் சென்னியும் வண்டுசென்று ஊதா
    விறலியர் முன்கையும் தொடியிற் பொலியா
    இரவல் மாக்களும்

  • இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்

    புறநானூறு

    இனிநினைந்து இரக்கம் ஆகின்று திணிமணல்
    செய்வுறு பாவைக்கு கொய்பூத் தைஇத்
    தண்கயம் ஆடும் மகளிரொடு கைபிணைந்து
    தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி
    மறைஎனல் அறியா மாயமில் ஆயமொடு
    உயர்சினை மருதத் துறையுறத் தாழ்ந்து
    நீர்நணிப் படிகோடு ஏறிச் சீர்மிகக்
    கரையவர் மருளத் திரையகம் பிதிர
    நெடுநீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து
    குளித்துமணற் கொண்ட கல்லா இளமை
    அளிதோ தானே யாண்டுண்டு கொல்லோ-
    தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
    இருமிடை மிடைந்த சிலசொல்
    பெருமூ தாளரோம் ஆகிய எமக்கே

    தொடித்தலை விழுத்தண்டினார்

  • இளையோர் சூடார் வளையோர் கொய்யார்

    புறநானூறு

    இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
    நல்யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
    பாணன் சூடான் பாடினி அணியாள்
    ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
    வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
    முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே

    குடவாயிற் தீரத்தனார்

  • திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்

    புறநானூறு

    திண்தேர் இரவலர்க்கு ஈத்த தண்தார்
    அண்டிரன் வரூஉம் என்ன ஒண்தொடி
    வச்சிரத் தடக்கை நெடியோன் கோயிலுள்
    போர்ப்புறு முரசும் கறங்க
    ஆர்ப்புஎழுந் தன்றால் விசும்பி னானே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்

    புறநானூறு

    ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும்
    வாடா யாணர் நாடும் ஊரும்
    பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
    கோடுஏந்து அல்குல் குறுந்தொடி மகளிரொடு
    காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப
    மேலோர் உலகம் எய்தினன் எனாஅப்
    பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
    சுட்டுக் குவி எனச் செத்தோர்ப் பயிரும்
    கள்ளியம் பறந்தலை ஒருசிறை அல்கி
    ஒள்ளெரி நைப்ப உடம்பு மாய்ந்தது
    புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது
    கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர்
    வாடிய பசியர் ஆகிப் பிறர்
    நாடுபடு செலவினர் ஆயினர் இனியே

    குட்டுவன் கீரனார்

  • நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்

    புறநானூறு

    நீடுவாழ்க என்று யான் நெடுங்கடை குறுகிப்
    பாடி நின்ற பசிநாட் கண்ணே
    கோடைக் காலத்துக் கொழுநிழல் ஆகிப்
    பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
    வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என
    நச்சி இருந்த நசைபழுது ஆக
    அட்ட குழிசி அழற்பயந் தாஅங்கு
    அளியர் தாமே ஆர்க என்னா
    அறன்இல் கூற்றம் திறனின்று துணிய
    ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
    வாழைப் பூவின் வளைமுறி சிதற
    முதுவாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    வெள்வேல் விடலை சென்றுமாய்ந் தனனே
    ஆங்கு அது நோயின்று ஆக ஓங்குவரைப்
    புலிபார்த்து ஒற்றிய களிற்றுஇரை பிழைப்பின்
    எலிபார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைக்
    கடல்மண்டு புனலின் இழுமெனச் சென்று
    நனியுடைப் பரிசில் தருகம்
    எழுமதி நெஞ்சே துணிபுமுந் துறுத்தே

    பெருஞ்சித்திரனார்

  • கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்

    புறநானூறு

    கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்
    சிலைகெழு குறவர்க்கு அல்குமிசைவு ஆகும்
    மலை கெழு நாட மா வண் பாரி
    கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ எற்
    புலந்தனை யாகுவை புரந்த யாண்டே
    பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது
    ஒருங்குவரல் விடாஅது ஒழிக எனக்கூறி
    இனையை ஆதலின் நினக்கு மற்றுயான்
    மேயினேன் அன்மை யானே ஆயினும்
    இம்மை போலக் காட்டி உம்மை
    இடையில் காட்சி நின்னோடு
    உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே

    கபிலர்

  • சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே

    புறநானூறு

    சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னே
    பெரிய கட் பெறினே
    யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே
    சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே
    பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னே
    என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே
    அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே
    நரந்தம் நாறும் தன் கையால்
    புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே
    அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ
    இரப்போர் புன்கண் பாவை சோர
    அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
    சென்றுவீழ்ந் தன்று அவன்
    அருநிறத்து இயங்கிய வேலே
    ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ
    இனிப் பாடுநரும் இல்லை படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை
    பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
    சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்று
    ஈயாது வீயும் உயிர்தவப் பலவே

    ஔவையார்

  • கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த

    புறநானூறு

    கவிசெந் தாழிக் குவிபுறத்து இருந்த
    செவிசெஞ் சேவலும் பொகுவலும் வெருவா
    வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப்
    பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும்
    காடுமுன் னினனே கட்கா முறுநன்
    தொடிகழி மகளிரின் தொல்கவின் வாடிப்
    பாடுநர் கடும்பும் பையென் றனவே
    தோடுகொள் முரசும் கிழிந்தன கண்ணே
    ஆள்இல் வரைபோல் யானையும் மருப்புஇழந் தனவே
    வெந்திறல் கூற்றம் பெரும்பேது உறுப்ப
    எந்தை ஆகுல அதற்படல் அறியேன்
    அந்தோ அளியேன் வந்தனென் மன்ற
    என்ஆ குவர்கொல் என் துன்னி யோரே
    மாரி இரவின் மரங்கவிழ் பொழுதின்
    ஆரஞர் உற்ற நெஞ்சமொடு ஓராங்குக்
    கண்இல் ஊமன் கடற்பட் டாங்கு
    வரையளந்து அறியாத் திரையரு நீத்தத்து
    அவல மறுசுழி மறுகலின்
    தவலே நன்றுமன் தகுதியும் அதுவே

    பெருஞ்சித்திரனார்