புறநானூறு
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று
ஐயம் கொள்ளன்மின் ஆரறி வாளிர்
இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
புன்பெயர் கிளக்கும் காலை என் பெயர்
பேதைச் சோழன் என்னும் சிறந்த
காதற் கிழமையும் உடையவன் அதன் தலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே
கோப்பெருஞ் சோழன்