Author: Pulan

  • தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய

    புறநானூறு

    தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய
    இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
    கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
    நிலமார் வையத்து வலமுறை வளைஇ
    வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையடு
    ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிக்
    கள்ளி போகிய களரியம் பறந்தலை
    முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
    சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்
    இன்னிசைப் பறையடு வென்றி நுவலத்
    தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
    ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
    ஞாலங் காவலர் கடைத்தலைக்
    காலைத் தோன்றினும் நோகோ யானே

    ஆலத்தூர் கிழார்

  • அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்

    புறநானூறு

    அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்
    துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
    இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்
    அறம்அறக் கணட நெறிமாண் அவையத்து
    முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
    பவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
    பருதி உருவின் பல்படைப் புரிசை
    எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
    வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்
    அறிந்தோன் மன்ற அறிவுடையாளன்
    இறந்தோன் தானே அளித்துஇவ் வுலகம்
    அருவி மாறி அஞ்சுவரக் கருகிப்
    பெருவறம் கூர்ந்த வேனிற் காலைப்
    பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
    பூவாட் கோவலர் பூவுடன் உதிரக்
    கொய்துகட்டு அழித்த வேங்கையின்
    மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே

    கருங்குழல் ஆதனார்

  • பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்

    புறநானூறு

    பலர்க்கு நிழ லாகி உலகம் மீக்கூறித்
    தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
    நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
    இடங் கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
    இன்னுயிர் விரும்பும் கிழமைத்
    தொன்னட் புடையார் தம்உழைச் செலினே

    பொத்தியார்

  • அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி

    புறநானூறு

    அழல் அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
    நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த
    புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வா என
    என்இவண் ஒழித்த அன்பி லாள
    எண்ணாது இருக்குவை அல்லை
    என்னிடம் யாது மற்று இசைவெய் யோயே

    பொத்தியார்

  • பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே

    புறநானூறு

    பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே
    ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே
    அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே
    திறவோர் புகழ்ந்த தின்நண் பினனே
    மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
    துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
    அனையன் என்னாது அத்தக் கோனை
    நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்த்ன்று
    பைதல் ஒக்கல் தழீஇ அதனை
    வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
    நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
    கெடுவில் நல்லிசை சூடி
    நடுகல் ஆயினன் புரவலன் எனவே

    பொத்தியார்

  • பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த

    புறநானூறு

    பெருங்சோறு பயந்து பல்யாண்டு புரந்த
    பெருங்களிறு இழந்த பைதற் பாகன்
    அதுசேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை
    வெளில்பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்தாங்குக்
    கலங்கினேன் அல்லனோ யானே-பொலந்தார்த்
    தேர்வண் கிள்ளி போகிய
    பேரிசை மூதூர் மன்றங் கண்டே

    பொத்தியார்

  • உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்

    புறநானூறு

    உள்ளாற்றுக் கவலைப் புள்ளி நீழல்
    முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள
    புலவுதி மாதோ நீயே
    பலரால் அத்தை நின் குறிஇருந் தோரே

    பெருஞ்கருவூர்ப்சதுக்கத்துப் பூதநாதனார்

  • பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

    புறநானூறு

    பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
    ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே

    கண்ணகனார் நத்தத்தனார்

  • நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

    புறநானூறு

    நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
    எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
    அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
    தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
    இசைமரபு ஆக நட்புக் கந்தாக
    இனையதோர் காலை ஈங்கு வருதல்
    வருவன் என்ற கோனது பெருமையும்
    அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
    அதனால் தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
    சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
    அன்னோனை இழந்தஇவ் வுலகம்
    என்னா வதுகொல் அளியது தானே

    பொத்தியார்

  • கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

    புறநானூறு

    கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
    காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
    வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
    அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று
    ஐயம் கொள்ளன்மின் ஆரறி வாளிர்
    இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
    புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
    புன்பெயர் கிளக்கும் காலை என் பெயர்
    பேதைச் சோழன் என்னும் சிறந்த
    காதற் கிழமையும் உடையவன் அதன் தலை
    இன்னதோர் காலை நில்லலன்
    இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே

    கோப்பெருஞ் சோழன்