Author: Pulan

  • எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ

    புறநானூறு

    எழுஇனி நெஞ்சம் செல்கம் யாரோ
    பருகு அன்ன வேட்கை இல்அழி
    அருகிற் கண்டும் அறியார் போல
    அகம்நக வாரா முகன்அழி பரிசில்
    தாள்இலாளர் வேளார் அல்லர்
    வருகென வேண்டும் வரிசை யோர்க்கே
    பெரிதே உலகம் பேணுநர் பலரே
    மீளி முன்பின் ஆளி போல
    உள்ளம் உள்அவிந்து அடங்காது வெள்ளென
    நோவா தோன்வயின் திரங்கி
    வாயா வன்கனிக்கு உலமரு வோரே

    பெருஞ்சித்திரனார்

  • குன்றும் மலையும் பலபின் ஒழிய

    புறநானூறு

    குன்றும் மலையும் பலபின் ஒழிய
    வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என
    நின்ற என்நயந்து அருளி ஈது கொண்டு
    ஈங்கனம் செல்க தான் என என்னை
    யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்
    காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
    வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித்
    தினை அனைத்து ஆயினும் இனிதுஅவர்
    துணை அளவு அறிந்து நல்கினர் விடினே

    பெருஞ்சித்திரனார்

  • ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்

    புறநானூறு

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
    புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
    அனைத்தா கியர் இனி இதுவே எனைத்தும்
    சேய்த்துக் காணாது கண்டனம் அதனால்
    நோயிலர் ஆகநின் புதல்வர் யானும்
    வெயிலென முனியேன் பனியென மடியேன்
    கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
    நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்
    மெல்லியல் குறுமகள் உள்ளிச்
    செல்வல் அத்தை சிறக்க நின் நாளே

    ஆவூர் மூலங்கிழார்

  • வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு

    புறநானூறு

    வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியடு
    கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
    கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
    மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
    உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
    செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
    மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
    வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே
    எம்மால் வியக்கப் படூஉ மோரே
    இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
    குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
    புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
    சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
    பாடறிந்து ஒழுகும் பண்பி னோரே
    மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
    உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்
    நல்லறி வுடையோர் நல்குரவு
    உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே

    கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்

    புறநானூறு

    பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
    கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
    செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி
    மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து
    கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப
    நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்
    களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை
    விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக் கோவே
    இவரே பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
    நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும்
    கறங்கு மணி நெடுந் தேர் கொள்க எனக் கொடுத்த
    பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்
    யானே பரிசிலன் மன்னும் அந்தணன் நீயே
    வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்
    நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
    அடங்கா மன்னரை அடக்கும்
    மடங்கா விளையுள் நாடு கிழவோயே

    கபிலர்

  • வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்

    புறநானூறு

    வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
    கட்சி காணாக் கடமா நல்லேறு
    கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
    கடிய கதழும் நெடுவரைப் படப்பை
    வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
    இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
    கோடிபல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
    நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி
    நுந்தை தாயம் நிறைவுற எய்திய
    ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
    நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
    புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
    இகழ்ந்ததன் பயனே இயல்தேர் அண்ணல்
    எவ்வி தொல்குடிப் படீஇயர் மற்று இவர்
    கைவண் பாரி மகளிர் என்றஎன்
    தேற்றாப் புன்சொல் நோற்றிசின் பெரும
    விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
    அரும்பு அற மலர்ந்த கருங்கால் வேங்கை
    மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
    இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
    பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே

    கபிலர்

  • மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்

    புறநானூறு

    மண்டுஅமர் அட்ட மதனுடை நோன்தாள்
    வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே
    பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
    நின்தலை வந்த இருவரை நினைப்பின்
    தொன்றுறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்
    அமர்வெங் காட்சியடு மாறுஎதிர்பு எழுந்தவர்
    நினையுங் காலை நீயும் மற்றவர்க்கு
    அனையை அல்லை அடுமான் தோன்றல்
    பரந்துபடு நல்லிசை எய்தி மற்று நீ
    உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும்
    ஒழித்த தாயும் அவர்க்குஉரித்து அன்றே
    அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும்
    இன்னும் கேண்மதி இசைவெய் யோயே
    நின்ற துப்பொடு நின்குறித்து எழுந்த
    எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
    நின்பெரும் செல்வம் யார்க்கும்எஞ் சுவையே
    அமர்வெஞ் செல்வ நீ அவர்க்கு உலையின்
    இகழுநர் உவப்பப் பழியெஞ் சுவையே
    அதனால்ஒழிகதில் அத்தைநின் மறனேவல்விரைந்து
    எழுமதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு
    ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
    செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர்
    அரும்பெறல் உலகத்து ஆன்றவர்
    விதும்புறு விருப்பொடு விருந்தெதிர் கொளற்கே

    புல்லாற்றூர் எயிற்றியனார்

  • பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய

    புறநானூறு

    பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
    மாமலை பயந்த காமரு மணியும்
    இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து
    அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
    ஒருவழித் தோன்றியாங்கு-என்றும் சான்றோர்
    சான்றோர் பாலர் ஆப
    சாலார் சாலார் பாலர் ஆகுபவே

    கண்ணகனார் நத்தத்தனார்

  • நினைக்கும் காலை மருட்கை உடைத்தே

    புறநானூறு

    நினைக்கும் காலை மருட்கை உடைத்தே
    எனைப்பெரும் சிறப்பினோடு ஈங்கிது துணிதல்
    அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத்
    தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
    இசைமரபு ஆக நட்புக் கந்தாக
    இனையதோர் காலை ஈங்கு வருதல்
    வருவன் என்ற கோனது பெருமையும்
    அது பழுது இன்றி வந்தவன் அறிவும்
    வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந் தன்றே
    அதனால் தன்கோல் இயங்காத்தேயத்து உறையும்
    சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
    அன்னோனை இழந்தஇவ் வுலகம்
    என்னா வதுகொல் அளியது தானே

    பொத்தியார்

  • கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்

    புறநானூறு

    கேட்டல் மாத்திரை அல்லது யாவதும்
    காண்டல் இல்லாது யாண்டுபல கழிய
    வழுவின்று பழகிய கிழமையர் ஆயினும்
    அரிதே தோன்றல் அதற்பட ஒழுகல் என்று
    ஐயம் கொள்ளன்மின் ஆரறி வாளிர்
    இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன்
    புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே
    புன்பெயர் கிளக்கும் காலை என் பெயர்
    பேதைச் சோழன் என்னும் சிறந்த
    காதற் கிழமையும் உடையவன் அதன் தலை
    இன்னதோர் காலை நில்லலன்
    இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே

    கோப்பெருஞ் சோழன்