Author: Pulan

  • யாண்டுபல வாக நரையில ஆகுதல்

    புறநானூறு

    யாண்டுபல வாக நரையில ஆகுதல்
    யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
    மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
    யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்க அதன்தலை
    ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

    பிசிராந்தையர்

  • விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்

    புறநானூறு

    விளைபதச் சீறிடம் நோக்கி வளைகதிர்
    வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்
    எலிமுயன் றனைய ராகி உள்ளதம்
    வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
    இயைந்த கேண்மை இல்லா கியரோ
    கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென
    அன்று அவண் உண்ணா தாகி வழிநாள்
    பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
    இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
    புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
    உரனுடை யாளர் கேண்மையடு
    இயைந்த வைகல் உளவா கியரோ

    சோழன் நல்லுருத்திரன்

  • தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

    புறநானூறு

    தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி
    வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
    நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
    கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்
    உண்பது நாழி உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக் குமே
    அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
    துய்ப்பேம் எனினே தப்புந பலவே

    மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

  • படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்

    புறநானூறு

    படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே

    பாண்டியன் அறிவுடை நம்பி

  • நாடா கொன்றோ காடா கொன்றோ

    புறநானூறு

    நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே

    ஔவையார்

  • நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே

    புறநானூறு

    நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே
    மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
    அதனால் யான்உயிர் என்பது அறிகை
    வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே

    மோசிகீரனார்

  • கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்

    புறநானூறு

    கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
    காவற் சாகாடு உகைப்போன் மாணின்
    ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே
    உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
    பகைக்கூழ் அள்ளற் பட்டு
    மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே

    தொண்டைமான் இளந்திரையன்

  • காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே

    புறநானூறு

    காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
    மாநிறைவு இல்லதும் பன்நாட்கு ஆகும்
    நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே
    வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்
    அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
    கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
    மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்
    வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
    பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
    யானை புக்க புலம்போலத்
    தானும் உண்ணான் உலகமும் கெடுமே

    பிசிராந்தையார்

  • உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்

    புறநானூறு

    உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்
    அமிழ்தம் இயைவ தாயினும் இனிதுஎனத்
    தமியர் உண்டலும் இலரே முனிவிலர்
    துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
    புகழ்எனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின்
    உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர்
    அன்ன மாட்சி அனைய ராகித்
    தமக்கென முயலா நோன்தாள்
    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே

    கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி

  • மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்

    புறநானூறு

    மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
    கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
    கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
    பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
    புலாஅல் அம்பின் போர்அருங் கடிமிளை
    வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
    உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
    இன்னே சென்மதி நீயே சென்று அவன்
    பகைப்புலம் படரா அளவை நின்
    பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே

    சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்