Author: Pulan

  • மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்

    புறநானூறு

    மலைவான் கொள்க என உயர்பலி தூஉய்
    மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்
    கடவுட் பேணிய குறவர் மாக்கள்
    பெயல்கண் மாறிய உவகையர் சாரல்
    புனைத்தினை அயிலும் நாட சினப் போர்க்
    கைவள் ஈகைக் கடுமான் பேக
    யார்கொல் அளியள் தானே நெருநல்
    சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
    குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
    நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
    வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
    நின்னும்நின் மலையும் பாட இன்னாது
    இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
    முலையகம் நனைப்ப விம்மிக்
    குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே

    கபிலர்

  • நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு

    புறநானூறு

    நீண்டொலி அழுவம் குறைய முகந்துகொண்டு
    ஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇப்
    பெருமலை யன்ன தோன்றுதல் சூன்முதிர்பு
    உரும்உரறு கருவியடு பெயல்கடன் இறுத்து
    வள்மலை மாறிய என்றூழ்க் காலை
    மன்பதை யெல்லாம் சென்றுணர் கங்கைக்
    கரைபொரு மலிநீர் நிறைந்து தோன்றியாங்கு
    எமக்கும் பிறர்க்கும் செம்மலை யாகலின்
    அன்பில் ஆடவர் கொன்று ஆறு கவரச்
    சென்று தலைவருந அல்ல அன்பின்று
    வன்கலை தெவிட்டும் அருஞ்சுரம் இறந்தோர்க்கு
    இற்றை நாளடும் யாண்டுதலைப் பெயர் எனக்
    கண் பொறி போகிய கசிவொடு உரன்அழிந்து
    அருந்துயர் உழக்கும்என் பெருந்துன் புறுவி நின்
    தாள்படு செல்வம் காண்டொறும் மருளப்
    பனைமருள் தடக்கை யடு முத்துப்படு முற்றிய
    உயர்மருப்பு ஏந்திய வரைமருள் நோன்பகடு
    ஒளிதிகழ் ஓடை பொலிய மருங்கில்
    படுமணி இரட்ட ஏறிச் செம்மாந்து
    செலல்நசைஇ உற்றனென் விறல்மிகு குருசில்
    இன்மை துரப்ப இசைதர வந்து நின்
    வண்மையில் தொடுத்தஎன் நயந்தினை கேண்மதி
    வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே
    என்அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த
    நின் அளந்து அறிமதி பெரும என்றும்
    வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்தருந்திப்
    பல்பொறிக் கொண்ட ஏந்துஎழில் அகலம்
    மாண்இழை மகளிர் புல்லுதொறும் புகல
    நாள்முரசு இரங்கும் இடனுடை வரைப்பின்நின்
    தாள்நிழல் வாழ்நர் நண்கலம் மிகுப்ப
    வாள் அமர் உயர்ந்தநின் தானையும்
    சீர்மிகு செல்வமும் ஏந்துகம் பலவே

    பெருஞ்சித்திரனார்

  • ஏற்றுக உலையே ஆக்குக சோறே

    புறநானூறு

    ஏற்றுக உலையே ஆக்குக சோறே
    கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள்ளிழைப்
    பாடுவல் விறலியர் கோதையும் புனைக
    அன்னவை பலவும் செய்க என்னதூஉம்
    பரியல் வெண்டா வருபதம் நாடி
    ஐவனங் காவல் பெய்தீ நந்தின்
    ஒளிதிகழ் திருந்துமணி நளியிருள் அகற்றும்
    வன்புல நாடன் வயமான் பிட்டன்
    ஆரமர் கடக்கும் வேலும் அவனிறை
    மாவள் ஈகைக் கோதையும்
    மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே

    வடமண்ணக்கன் தாமோதரனார்

  • மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்

    புறநானூறு

    மரைபிரித்து உண்ட நெல்லி வேலிப்
    பரலுடை முன்றில் அங்குடிச் சீறூர்
    எல்அடிப் படுத்த கல்லாக் காட்சி
    வில்லுழுது உண்மார் நாப்பண் ஒல்லென
    இழிபிறப் பாளன் கருங்கை சிவப்ப
    வலிதுரந்து சிலைக்கும் வன்கண் கடுந்துடி
    புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோடு இரட்டும்
    மலைகெழு நாடன் கூர்வேல் பிட்டன்
    குறுகல் ஓம்புமின் தெவ்விர் அவனே
    சிறுகண் யானை வெண்கோடு பயந்த
    ஒளிதிகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து
    நார்பிழிக் கொண்ட வெங்கள் தேறல்
    பண்அமை நல்யாழ்ப் பாண்கடும்பு அருத்தி
    நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு
    இரும்புபயன் படுக்குங் கருங்கைக் கொல்லன்
    விசைத்துஎறி கூடமொடு பொருஉம்
    உலைக்கல் அன்ன வல்லா ளன்னே

    உறையூர் மருத்துவன் தாமோதரனார்

  • அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை

    புறநானூறு

    அன்ன வாக நின் அருங்கல வெறுக்கை
    அவை பெறல் வேண்டேம் அடுபோர்ப் பேக
    சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல
    நன்னாடு பாட என்னை நயந்து
    பரிசில் நல்குவை யாயின் குரிசில் நீ
    நல்கா மையின் நைவரச் சாஅய்
    அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
    கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன
    ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்
    தண்கமழ் கோதை புனைய
    வண்பரி நெடுந்தேர் பூண்க நின் மாவே

    அரிசில் கிழார்

  • கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்

    புறநானூறு

    கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்
    சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
    கார்வான் இன்னுறை தமியள் கேளா
    நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்
    அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை
    நெய்யடு துறந்த மையிருங் கூந்தல்
    மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப்
    புதுமலர் கஞல இன்று பெயரின்
    அதுமன் எம் பரிசில் ஆவியர் கோவே

    பெருங்குன்றூர் கிழார்

  • கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி நின்

    புறநானூறு

    கறங்குமிசை அருவிய பிறங்குமலை நள்ளி நின்
    அசைவுஇல் நோந்தாள் நசைவளன் ஏத்தி
    நாடொறும் நன்கலம் கனிற்றொடு கொணர்ந்து
    கூடுவிளங்கு வியன்நகர்ப் பரிசில் முற்று அளிப்பப்
    பீடில் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச்
    செய்யா கூறிக் கிளத்தல்
    எய்யா தாகின்று எம் சிறு செந்நாவே

    வன்பரணர்

  • நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்

    புறநானூறு

    நள்ளி வாழியோ நள்ளி நள்ளென்
    மாலை மருதம் பண்ணிக் காலைக்
    கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
    வரவுஎமர் மறந்தனர் அது நீ
    புரவுக்கடன் பூண்ட வண்மை யானே

    வன்பரணர்

  • அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

    புறநானூறு

    அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
    ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
    ஓடி உய்தலும் கூடும்மன்
    ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே

    ஓரேருழவர்

  • ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்

    புறநானூறு

    ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
    படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்
    இன்னாது அம்ம இவ் வுலகம்
    இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே