புறநானூறு
இரங்கு முரசின் இனம் சால் யானை
முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே
நீயே முன்யான் அரியு மோனே துவன்றிய
கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
கழைக் கரும்பின் ஒலிக்குந்து
கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
கண் ணன்ன மலர்பூக் குந்து
கருங்கால் வேங்கை மலரின் நாளும்
பொன் னன்ன வீ சுமந்து
மணி யன்ன நீர் கடற் படரும்
செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை
நீவா ழியர் நின் தந்தை
தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே
ஒருசிறைப் பெரியனார்