புறநானூறு
விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு
இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ
நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
குடகடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்